Load Image
Advertisement

மயக்கமா..கலக்கமா..? மந்தநிலையை எதிர்கொள்ள பப்பெட்டின் 5 அறிவுரைகள்..!

Dizziness..confusion..? Puppets advice to face recession..!   மயக்கமா..கலக்கமா..? மந்தநிலையை எதிர்கொள்ள பப்பெட்டின் 5 அறிவுரைகள்..!
ADVERTISEMENT
அமெரிக்க பங்குச்சந்தையின் பிதாமகன் என்றழைக்கப்படும் வாரன் பப்பெட், முதலீட்டாளர்கள் எவ்வாறு பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். சமீப காலமாக பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை நீடிக்கும் நிலையில், முதலீடு செய்யும் முன் முதலீட்டாளர்கள் இதனை கருத்தில் கொள்ளலாம்.

1. சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள் :



ரியல் எஸ்டேட், பொருட்கள் அல்லது சேவையை உற்பத்தி செய்யும் தொழில்களில் உற்பத்தி செய்யுங்கள். பண்ணை நிலங்களில் முதலீடு செய்யலாம். இந்த சொத்துக்களில் முதலீடு செய்வதால், ரொக்க பரிமாற்றம் அதிகரிக்கும். இது மறுமுதலீடு செய்ய அல்லது டிவிடெண்ட் தொகை திரும்ப செலுத்துவதற்கு உதவும். ஆக்கப்பூர்வ சொத்துக்களில் முதலீடு செய்தவதால், சந்தையின் செயல்திறனை சாராமல், குறிப்பிட்ட வருமானத்தை உருவாக்கும்.

2. நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள் :



முதலீட்டாளர்கள், குறுகிய கால முதலீட்டை தவிர்த்து, நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். காலப்போக்கில் பங்குச்சந்தைகள் உயரும் என்பதால், நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருப்போருக்கு உரிய பலன் கிடைக்கும்.
Latest Tamil News

3. முதலீட்டை பரவலாக்குங்கள் :



முதலீட்டாளர்கள், முதலீட்டை பரவலாக்குவது மிக முக்கியம். பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதால், நஷ்டம் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். எந்த ஒரு முதலீடும் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதால், பரவலாக்குதல் மூலம் ஆபத்தை குறைக்க இயலும்.

4. பங்குச்சந்தை போக்கிற்கு எதிர்வினையாற்றுவதை தவிருங்கள் ;



பங்குச்சந்தையின் ஏற்றத்தாழ்வுகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றுவதை தவிர்க்க வேண்டுமென பப்,பெட் எச்சரிக்கிறார். தற்போதைய சூழலில், சந்தைகள் குறித்து மிகைப்படுத்தலில் அவசர முடிவுகளை எடுப்பது எளிது. சந்தை போக்கை, முதலீட்டாளர்கள் நிதானமாக கவனிப்பதுடன், நீண்ட கால முதலீடுகளின் மீது கவனம் செலுத்துவது நலம்.

5. வலுவான அடிப்படை பங்குகளில் முதலீடு :



Latest Tamil News முதலீட்டாளர்கள், வலுவான அடிப்படை கொண்ட நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்யலாம். பேலன்ஸ் சீட், நம்பகமான வருமானம் மற்றும் நல்ல தலைமை நிர்வாகிகளை கொண்ட நிறுவனங்கள், தற்போதைய பொருளாதார மந்தநிலையை சமாளிப்பதுடன், மறுபுறம் வளர்ச்சி காணும் திறன் கொண்டவையாக இருக்கும்.


உலகளாவிய பொருளாதார நிலவரம், பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த புள்ளிவிவரங்கள், பப்பெட்டின் அறிவுரைக்கு பொருத்தமாக உள்ளது. கோவிட் ஊரடங்கு சமயத்தில், தொடர்ந்து சந்தைகளில் முதலீடு செய்தவர்கள், அதற்கேற்ப கணிசமான வருமானத்தை ஈட்டியுள்ளனர்.


அமெரிக்காவின் 500 மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகள் சந்தைப்படுத்தப்படும், எஸ் & பி 500ல் முதலீடு செய்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளில், 34.39 சதவீதம் உயர்வையும், 5 ஆண்டுகளில் 52.47 சதவீதம் உயர்வும் திரும்ப கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement