Load Image
Advertisement

தி.மு.க.,வில் ஐக்கியமாகுங்கள் கமல்!

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ...



எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
Latest Tamil News

'இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது எங்கள் கனவுத் திட்டம்; அதை நிறைவேற்றியிருக்கும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளை போற்றுவதில், தமிழகம் பிறருக்கு வழிகாட்டுகிறது' என, திருவாய் மலர்ந்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்.

கமல் கட்சி துவங்கிய போது, நாறிக் கிடக்கும் தமிழக அரசியலை துாய்மைப்படுத்த அவதாரம் எடுத்ததைப் போல, 'ஊழல்வாதிகளுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்' என்று, 'பில்டப்' கொடுத்தார். இப்போது, சினிமா துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தி.மு.க.,வை ஆதரிக்கிறார் என்பது, ஊர் உலகத்திற்கு நன்றாகவே தெரியும்.

'இல்லத்தரசிகளை போற்றுவதில், தமிழகம் பிறருக்கு வழிகாட்டுகிறது' என்று கூறும் கமல் அவர்களே... குடும்பத் தலைவியருக்கு வழங்கப்படவிருக்கும் உரிமைத் தொகை எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழக ஆண்களை எல்லாம் குடிகாரர்களாக்கி, லட்சக்கணக்கான அப்பாவி ஏழை பெண்களின் வாழ்வை நாசமாக்கி, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயில் தான், அவர்களுக்கே உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதற்காக, 'டாஸ்மாக்' வருமானத்தை, மேலும், ௫,௦௦௦ கோடி ரூபாய் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதையா, பிறருக்கான சிறந்த வழிகாட்டுதல் என்று பாராட்டுகிறீர்கள்? ஒருவரது கண்களை குருடாக்கி, அழகான ஓவியத்தை, அவருக்கே அன்பளிப்பாகக் கொடுத்தால், ஏற்றுக்கொள்வீரா உலகநாயகரே?
Latest Tamil News
தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால்,ஒரு ராஜ்யசபா, 'சீட்'டும், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் சீட்டும் கிடைக்கும். இதுதான், தி.மு.க.,வில் உங்களுக்கு கிடைக்கும் மரியாதை. இதற்காக, உங்கள் கொள்கையிலிருந்து விலகி, தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிக்க வேண்டுமா? இப்படி ஜால்ரா அடிப்பதை விட, சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமே? அரசியல் எதற்கு உங்களுக்கு?

சினிமாவில் இருந்தபடியே முதல்வரை வானளாவ புகழ்ந்தால், சினிமா வாழ்க்கை மேலும் சிறப்படையும்; வருமானமும் குறையாது. அரசியல் மோகம் தீரவில்லை என்றால், மக்கள் நீதி மய்யத்தை ஓரம் கட்டி விட்டு, தி.மு.க.,வில் ஐக்கியமாகி விடுங்கள். ஒரு அமைச்சர் பதவியாவது நிச்சயம் கிடைக்கும்.


வாசகர் கருத்து (48)

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    இவன் தனது பெயரை எப்படியாகவும் கெடுத்துக்கொண்டு, தனது உண்மை உருவத்தை நிலை நாட்டி விட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்து விட்டான் போல.

  • Devi M Devi M -

    0

  • Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா

    இப்போது இல்லை எப்போதுமே கமல்ஹாசன் கட்டுமர கம்பெனியின் அல்லக்கைதான். அரசியலில் இறங்கி வெல்பவன் மிகச்சிலரே. எஞ்சினீரிங் பட்டம் பெற்று, புகழ்பெற்ற ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ பட்டம் பெற்று பின் தேசிய அளவில் தேர்வில் தேர்வாகி ஐ.பி.எஸ் ஆகி பத்து ஆண்டுகள் மணிபுரிந்து பின் பதவியை துறந்து அரசியலில் இறங்கி மெதுவாக முன்னேறி வரும் அண்ணாமலை ஒருவகை. எந்த அரசியல் பின்புலமும் இல்லாத விவசாய குடும்பத்தில் பிறந்து கிராம கிளைக்கழக செயலாளர் பனி தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன எடப்பாடி கே பழனிசாமி போன்றவர்கள் ஒரு வகை. கல்வியறிவு, பேச்சுத்திறன் என்ற எந்த தகுதியும் இல்லாத தற்குரியாக இருந்தாலும் அப்பனுக்கு பிறகு மவன் என்ற திராவிட பாலிசி படி வந்து நாற்காலியில் அமரும் ஸ்டாலின் போன்றவர்கள் ஒருவகை. அது போல சினிமாவில் இருந்து வந்து அரசியலில் கோலோச்சிய மிகச்சிலர் ஒருவகை. அது போல எம்ஜிஆர் போல் தானும் ஒரு ஹீரோ. தானும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று குதித்து மொகரையை பெயரத்துக்கொண்ட பலரில் ஒருவர் கமல். சினிமாவில் கமல்ஹாசன் ஹீரோ. சினிமாவில் மட்டும்தான். ரியல் வாழ்க்கையில் அந்தாளு ஒரு சாக்கடை என்று லோகத்துக்கே தெரியும். இன்றைய தேதியில் கமல் தனித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ஒரு பர்சென்ட் கிடைக்கும் அவ்ளோதான்.

  • Rajaraman - viluppuram,இந்தியா

    தாலிக்கு தங்கம் கொடுத்தார்களே உங்க அம்மா, அந்த பணம் எங்கிருந்து வந்தது. இந்த பக்கம் தாலிக்கு தங்கம் கொடுத்துட்டு, டாஸ்மாக் வழியாக தாலியை அறுத்த போது தெரியலையா தினமலர் அறிவு ஜீவிகளே......

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். எதற்காக தனி கட்சி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்