புதுடில்லி: மரண தண்டனை கைதிகளை தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்றுவதை விட, வலி குறைந்த முறையில் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை செய்யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கான தண்டனையை, வலி குறைந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், துப்பாக்கியால் சுட்டும், விஷ ஊசி போட்டு அல்லது மின்சார இருக்கையை பயன்படுத்தி தண்டனையை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சந்திரசூட் கூறுகையில், விஷ ஊசி செலுத்துவது வலி நிறைந்தது. துப்பாக்கியால் சுடுவது என்பது, ராணுவ ஆட்சியாளர்களுக்கு விருப்பமான பொழுது போக்காக இருந்தது. இது முற்றிலும் மனித உரிமை மீறல் ஆகும்.
விஷ ஊசி செலுத்தும்போது, எந்த மாதிரியான ரசாயனம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. வேறு வழிகள் இருந்தால், தூக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தவிர வலி குறைந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றும் முறை குறித்த ஆலோசனையை மத்திய அரசு துவக்க வேண்டும். தூக்கில் போடுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு கூற வேண்டும். இந்த விவகாரம் குறித்து குழு அமைக்க தயாராக உள்ளோம். இவ்வாறு நீதிபதி கூறினார்.
வாசகர் கருத்து (22)
பொதுமக்களின் பணத்தை லஞ்சமாக கொள்ளையடிக்கும் மற்றும் சாதி, மதம், இனம் பெயரால் மக்களை தூண்டி அரசியல் செய்வோரை கழுமரத்தில் ஏற்றியோ அல்லது யானை காலால் தலையை மிடறியோ வலியில்லாமல் மரணதண்டனையை நிறவேற்ற வேண்டும் அய்யா.
கொலிஜியம் முறை ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி . மரணதண்டனை, சிறப்பாக நாட்டின் பிரிவினை வாதத்திற்கு சார்பான பயங்கரவாதம் உட்பட்ட கொலைகளுக்கு ராணுவ போலீஸ் போன்றவர்களை கொன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ஆகக் கூடியது ஒருவருட காலத்திட்ற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய முறையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்த வகை குற்றவாளிகலின் சொத்துக்கள் அனைத்தும் நாட்டுடைமையாகப் பட வேண்டும். கொலையுண்டவர்கலின் குடும்பத்திடம் சொத்தை பிரித்து கொடுக்க வேண்டும் . அதே சமயம் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாகப் படாமல் இருக்க சட்டம் கொஞ்சம் இறுக்கப் பட வேண்டும். கனடாவில் மரணதண்டனை இல்லை ஆனால் அண்மையில் எடுத்த ஆய்வின் படி பொதுமக்கள் மரணதண்டனைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் .
இது நீதிமன்றத்தின் அதிகார மீறலா? கொள்கை அடிப்படையிலான சட்டங்களை உருவாக்குவது மக்கள் தேர்ந்து எடுத்த பாராளுமன்றம் நீதிமன்றம் அல்லவே. சட்டம் இயற்ற விருப்பமானவர்கள் முறையாக தேர்தலில் நின்று பாராளுமன்றம் செல்லட்டும்.
Naan vali ellaamal sagalaam endraal yen ethiriyai endre kontru viduven.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு - should remember one key point here. Serious cases should not be prolonged for a longer period. For ex: in this case, 2009 case only discussed now in 2023... it means 14 years we are taking and yet to decide about what to do with the culprit/criminal? is it correct? WHy don't you think in that way and make new design/model to finalise within a year?? Never agreed to release the criminal just because they behaved nicely inside the jail. Because they do not have any other choice. If you decide the criminal to release on this basis, then someone will ask the court to give 10 years jail in advance to check the character and once out of jail, he can be eligible to rape any women... Is it correct?? Think... First hang the criminal immediately and then discuss with other options of hanging and all...