புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்றோருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று நடந்தது.
இந்த திட்டத்தின் வாயிலாக கல்வி பயின்று வரும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவர்களான 1,250 பேருக்கு 80 மையங்களில் தன்னார்வலர்கள் மூலம் நேற்று தேர்வு நடந்தது.
தேர்வு மையங்களை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!