துப்பாக்கியால் சுட்டு பழகியவர் கைது; பயிற்சியாளருக்கு வலை
திருநெல்வேலி : திருநெல்வேலியில் கைத்துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர் அஜய்கோபியை 24, போலீசார் கைது செய்தனர். பயிற்சியாளர் வெள்ளைசுந்தரை 36, தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவருக்கு மற்றொருவர் கைத்துப்பாக்கியால் சுட பயிற்சியளிக்கும் வீடியோ வைரலாகியது. போலீஸ் விசாரணையில் துப்பாக்கியால் சுட பயிற்சி அளிக்கும் நபர் மகாராஜநகரை சேர்ந்த வெள்ளைசுந்தர் என்பதும், பயிற்சி பெறுபவர் அவரது உறவினர் அஜய்கோபி எனவும் தெரிந்தது.
வெள்ளை சுந்தர் மீது தேனாம்பேட்டை போலீஸ் உள்ளிட்ட பல ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்தன. அஜய்கோபி சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இப்பயிற்சி பெற்றதும், அஜய்கோபிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த வீடியோ வெளியானதும் தெரிந்தது. அஜய்கோபியை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் வாலிபர் ஒருவருக்கு மற்றொருவர் கைத்துப்பாக்கியால் சுட பயிற்சியளிக்கும் வீடியோ வைரலாகியது. போலீஸ் விசாரணையில் துப்பாக்கியால் சுட பயிற்சி அளிக்கும் நபர் மகாராஜநகரை சேர்ந்த வெள்ளைசுந்தர் என்பதும், பயிற்சி பெறுபவர் அவரது உறவினர் அஜய்கோபி எனவும் தெரிந்தது.
வெள்ளை சுந்தர் மீது தேனாம்பேட்டை போலீஸ் உள்ளிட்ட பல ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்தன. அஜய்கோபி சட்டக்கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இப்பயிற்சி பெற்றதும், அஜய்கோபிக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த வீடியோ வெளியானதும் தெரிந்தது. அஜய்கோபியை போலீசார் கைது செய்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!