Load Image
Advertisement

தடுப்பு இல்லாத கால்வாய் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

Tamil News
ADVERTISEMENT


திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட வீடுகள், நான்கு திருமண மண்டபங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் செல்ல, பொதுப்பணி துறை கால்வாய் அமைத்து உள்ளது.

இந்த கால்வாய், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ பிரதான சாலை வழியாக ஜே.என்.சாலையை கடக்கிறது. அங்கிருந்து, அரசு மருத்துவமனை, வி.எம்.நகர்., வழியாக காக்களூர் ஏரிக்கு செல்கிறது.

ஜே.என்.சாலையில் இருந்து அய்யனார் அவென்யூ பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த கால்வாயில் தடுப்புச் சுவர் இல்லை.

இதனால், அவ்வப்போது, வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கழிவு நீர் கால்வாயில் விழுந்து விடுகின்றனர். கனரக வாகனங்கள் செல்லும் போது, நடந்து செல்வோரும் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுப்பணித் துறையினர், இக்கால்வாயில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement