Load Image
Advertisement

இ- - சேவை மையங்களில் அதிக கட்டணம் ஆய்வு செய்ய இருப்பதாக அதிகாரி தகவல்



திருத்தணி: தமிழகத்தில் பொதுமக்கள், அரசின் பல்வேறு சான்றிதழ்கள் பெற, தாசில்தார் மற்றும் நகராட்சி அலுவலக 'இ- - சேவை' மையங்களை அணுகி, பதிவு செய்து சான்றிதழ்கள் பெற்று வருகின்றனர்.

இந்த பொது இ- - சேவை மையங்களில் வருவாய்த் துறையின் வாயிலாக வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு 60 ரூபாய் பெறப்படுகிறது.

ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு, 10 ரூபாய், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடர்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு, 60 ரூபாய் என அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திருத்தணி நகராட்சியில் பழைய சென்னை சாலையில் இயங்கி வரும் ஒரு தனியார் பொது 'இ- - சேவை' மையத்தில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த விஜயா என்பவர் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பம் செய்வதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பலமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதாவது மேற்கண்ட ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், 200 - --400 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் தனியார் இ - -சேவை மையத்தில் வசூலித்துள்ளனர்.

இது குறித்து விஜயா, திருத்தணி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

சில மாதங்களாகவே திருத்தணியில் இயங்கும் பல தனியார் பொது இ- - சேவை மையங்களில் சான்றுகளை பெற விண்ணப்பிக்க செல்லும் மக்களிடம் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தை விட பல மடங்கு வசூல் செய்து வருகின்றனர்.

எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், திருத்தணியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் இ- - சேவை மையங்களில் திடீர் ஆய்வு நடத்தி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இ- - சேவை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட இ - -சேவை மைய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தனியார் இ- - சேவை மையங்களில் கூடுதல் பணம் வசூலிப்பதாக எனக்கும் புகார் வந்துள்ளது.

ஓரிரு நாட்களில், திருத்தணி பகுதியில் இயங்கி வரும் அனைத்து தனியார் இ- - சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் செயல்படும் இ- - சேவை மையங்களிலும் ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement