Load Image
Advertisement

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு



மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெங்கடாபுரம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி சுதா,35.

இவர், நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்களை சிங்கபெருமாள் கோவிலில் வாங்கிக் கொண்டு, சிங்கபெருமாள் கோவில் -- ஒரகடம் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த இரு மர்ம நபர்கள், சுதா கழுத்தில் அணிந்து இருந்து, 6 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து, சுதா அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர், பள்ளி சீருடை அணிந்து இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

எனவே, இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement