மரநாய் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், அருகே வித்தியாசமான உயிரினம் சுற்றுவதாக, தீயணைப்பு மற்றும் வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், அங்குள்ள இடங்களை ஆய்வு செய்ததில், கோவிலின் குளத்திற்குள், மர நாய் ஒன்று சுற்றி திரிவதை பார்த்துள்ளனர்.
உடனடியாக, தாங்கள் வைத்திருந்த சிறப்பு உபகரணங்கள் வாயிலாக, மர நாயை பிடித்தனர். பாதுகாப்புடன் அதை பை ஒன்றில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் வனத்துறை அதிகாரிகளிடம், மரநாயை தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!