ADVERTISEMENT
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அப்பாராவ் தெருவில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புக்காகவும், தெரு மின் விளக்குகளுக்காகவும் சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், இரு மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதில், ஒரு மின் கம்பத்தின், ஒரு பக்கம் முழுதும், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, விரிசல் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன.
மற்றொரு மின் கம்பத்தில் 'பாடி ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்' என்பதற்கு ஏற்ப அடிப்பாகத்தில் பாதியளவிற்கு சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மீதி கம்பம் மட்டுமே உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள அப்பாராவ் தெரு வழியாக செல்லும் கனரக வாகனங்கள், சேதமடைந்த மின் கம்பத்தின் மீது லேசாக உரசினாலோ அல்லது பலத்த காற்றுடன் மழை பெய்தாலோ மின் கம்பம் சாய்ந்து விழுந்தால், பெரிய அளவில், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அப்பாராவ் தெருவில், சேதமடைந்த இரு மின் கம்பங்களையும் அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!