Load Image
Advertisement

வரும் 20ல் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் முகாம்

கரூர்: பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் வரும், 20ல் நடக்கிறது.
கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர், வெண்ணைமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், நாளை (20)- மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் (அப்ரன்டீஸ்) சேர்க்கை முகாம் நடக்கிறது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றிகரமாக பயிற்சியைன முடித்து, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி மேற்கொள்ளாத பயிற்சியாளர்கள் தங்களது கல்வி, ஜாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (சி.ஓ.இ., தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உள்பட) ஆகியவற்றின் அசல், நகல்களுடன்
பங்கேற்கலாம்.
தொழிற்பழகுனர் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகுனர்களின் வெற்றிடத்தை நிறைவு செய்திடும் வகையில், உரிய நிறுவன பதாகைகளுடன் முகாமில் பங்கேற்று தொழிற்பழகுனர்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் விபரம் பெற, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூர் என்ற முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement