ஏகாதசி பூஜை
தொண்டி, : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் பங்குனி ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூ தேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பட்டாச்சாரியார் கருணாகரன் தலைமையில் நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!