கடின உழைப்பு, விடா முயற்சி அவசியம் சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை

காவல்துறையினரின் வாரிசுதாரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
இதில், சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள், தீயணைப்புத்துறை சிறைத்துறையில் பணிபுரியும், சீருடை பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களின், துணைவியர் மற்றும் வாரிசுதாரர்கள் என, 1,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றுடன், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்தது.
இம்முகாமை, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், துவக்கி வைத்து பேசியதாவது:
வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. என்ன மாதிரியான வேலையை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. பலர், ஆரம்பத்திலேயே 50 - 60 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
நான், இன்ஜினியரிங் படித்து, விசாகப்பட்டினத்தில் 12 மணி நேரம், கட்டுமான தளத்தில் பணி புரிந்தேன்.
காவல் துறையில் சேர்ந்தபோது, பைக்கில் சென்று பணி செய்ய தான் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம், 'ஏசி' வசதி கிடைக்கவில்லை.
மார்க்கெட் நிலவரத்தை வைத்து தான், நிறுவனங்கள் ஊதியம் வழங்கும். பின், பணியில் காட்டும் ஆர்வம், உழைப்பை வைத்து, ஊதியத்தை உயர்த்தி வழங்குவர்.
களப்பணி சார்ந்த வேலை செய்தால், வாழ்க்கையில் ஏற்படும் விபரீதங்களை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.
சொந்த ஊரில் தான் வேலை வேண்டும் என, சிலர் கூறுகின்றனர். நான், உத்தரகாண்டில் பிறந்து, டில்லியில் படித்து, தமிழகத்தில் வேலை செய்கிறேன்.
இடம் பெயர்ந்து வேலை செய்வதில் குடும்பம் சார்ந்த சிரமம் இருக்கும் தான். அதையெல்லாம் கடந்து, வாழ்க்கையில் முன்னேற, பிற பகுதி கலாச்சாரத்தை உணர, பலவித அனுபவங்கள் கிடைக்க, இடம் பெயர்ந்து வேலை செய்வது அவசியம். கடின உழைப்பும், விடாமுயற்சியும் வாழ்க்கையை அர்த்தம் கொண்டதாக அமைத்து கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன், இணை ஆணையர் சாமூண்டீஸ்வரி, துணை ஆணையர்கள் மகேந்திரன், ராதாகிருஷ்ணன், ராமமூர்த்தி, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு உறுப்பினர் ராம்கிஷோர், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வேலைவாய்ப்பு முகாம், இன்றும் நடைபெற உள்ளது.
வேலை தேடிய கணவர்கள்
வேலைவாய்ப்பு முகாமில், 600 பெண்கள், 400 ஆண்கள் கலந்து கொண்டனர். இதில், 35க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண் காவலர்களின் கணவர்கள். இவர்களில் பெரும்பாலானோர், 35 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருந்தனர்.
வாசகர் கருத்து (6)
இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமாத் தொழிலில் இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் மிக மிகக் குறுகிய காலத்தில் மிக மிகக் குறுகிய உழைப்பில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துவிடுகின்றனர் .ஆனால் உண்மையாக நேர்மையான முறையில் மிக மிகக் கடுமையாக உழைத்து சம்பாதிப்பவர்கள் இக்காலத்தில் எளிதில் முன்னேறவே முடியாது .கையிலே வாங்கினேன் பையிலே போட்டேன் காசு போன இடம் தெரியல ,இன்னும் காசு போன இடம் தெரியல ...அப்படின்னு புலம்பிக்கிட்டே வாழ்க்கையை வாங்குகிற சொச்ச சம்பளத்துக்கு வருமான வரியைக் கட்டிப்புட்டு ,பிற வரிகளையும் அரசுக்கு உண்மையா செலுத்திட்டு மீதிக் காலத்தை ஓட்டவேண்டியதுதான் .எப்பப் பார்த்தாலும் அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டே வாயைக் கட்டி வயித்தைக் கட்டி எல்லாரும் வாழ்க்கையை நடத்தணும்...
கடின உழைப்பை , அதன் மதிப்பை, தமிழகத்தின் TASMAC இருக்கும் வரை மக்கள் உணரவே மாட்டார்கள். இங்கு வந்து வேலை செய்யும் வட மாநிலத்தவர் எண்ணிக்கையே இதற்கு சாட்சி. சாதாரண வேலைக்கே நம் மக்கள் கிடைப்பது இல்லை. திட போதையை ஒழிக்க அரசு காட்டும் ஆர்வத்தை, திரவ போதையை ஒழிப்பதிலும் காட்டி, தமிழக மக்களை கடின உழைப்பின் பக்கம் திருப்ப வேண்டும்.
இந்தியாவில் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைச்சுடுச்சு ,ஆனால் இனிமே அரசாங்கத்தில் வேலை கிடைப்பது பலருக்கு குதிரைக்கொம்புதான் ,நிரந்தரமாகப் பணி கிடைப்பதும் ,பணியில் இருந்து ஓய்வு பெற்றால் பென்சன் கிடைப்பதும் மிகவும் சந்தேகம்தான் ,பெரும்பாலும் பலருக்கு தனியார் நிறுவனங்களில் தான்வேலை வாய்ப்பு கிடைக்கும் அதுவும் மிக மிகக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் .மக்கள் தொகை அதிகரிப்பதால்,படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் வேலைக்கு ஆட்கள் நிறையக் கிடைப்பதால் ஊதியம் பெரும்பாலும் குறைத்தே கொடுப்பார்கள் ,ஆனால் கொடுக்கும் சம்பளத்திற்கு பல மடங்கு வேலையைக் கசக்கிப் பிழிந்து விடுவார்கள் மேலும் வேலையும் நிரந்தரமும் அல்ல. ,தாற்காலிகமாகவே பலர் பணியில் அமர்த்தப்படுகின்றனர் .குறைந்த ஊழியர்களை வைத்து ,குறைந்த சம்பளம் கொடுத்து அதிக லாபம் ஈட்டுவதே தனியார் நிறுவனங்களின் ,தனியார் தொழிற்சாலைகளின்,தனியார் கார்போரேட்களின் மிக மிக முக்கியக் குறிக்கோளாகும் ,தலைக்கு மேல் கத்தி எப்பொழுதும் தொங்கிக் கொண்டே இருக்கும் தனியார் நிறுவனங்களில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஒரு சிலர் அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும் எவரும் மறுக்க முடியாது ஆனால் அதன் சதவீதம் ரொம்பவும் குறைவு .மிகக் கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்ற போக்கு தற்போதைய இளைஞர்களிடம் மாறிவிட்டது. "ஸ்மார்ட் ஒர்க்" அதாவது மிகக் குறைந்த உழைப்பில் ,குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கவே பலர் விரும்புகின்றனர் அந்த மாதிரி வேலையைத் ,தொழிலைத் தான் தேர்ந்து எடுக்கின்றனர்.இன்னும் எதிர்காலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் .
இந்தியாவில் ரெண்டு கோடி பேருக்கு வேலை நியமன ஆணையை கைவசம் ரெடியா முக்கியப் புள்ளி ஒருத்தர் வெச்சுருக்காரு ,அதை எப்போ கொடுக்கப் போகிறாரோ தெரியல ....
I pity and have all sympathy to the Police Commisioner. Inspite of your all hardwork and offering life to nab criminals, your hands are tied and even judiciary is blind because of the patethic and vague judicial tem we have most criminals, land grabbers politcians escape and roam free. Untill major change and reforms in Judiciary and Police is made there will not be any change and police inspite of their swett and hardwork would go in vain as they are unable to take crucials decision and controlled by criminal and corrupt politicians