விபத்தில் ஒருவர் பலி எஸ்.பி., வாகன உதவி
உச்சிபுளி, : ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த ரசூல் பல்லாக்கு மகன் சீனி முகமது 20. ைஹதர் அலி மகன் சுகைபூதீன் 18, மண்டபம் முகமது கசாலி மகன் ராஜா உசேன் 20, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் அரியமான் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கிருந்து மண்டபம் சென்ற போது அரியமான் பஸ்ஸ்டாப் அருகே இரவு 10:30 மணிக்கு கீழே விழுந்து காயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் ராஜா உசேன் இறந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த எஸ்.பி., தங்கதுரை காயமடைந்த சுகைபூதீன், சீனி முகமது ஆகியோரை தனது அதிவிரைவுப்படை வாகனத்தில் ஏற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினார். உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!