தம்பியை வெட்டிய அண்ணன்கள் மீது வழக்கு
பெரியகுளம், : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னு மகன் கணேசன் 35. இவர் திருநங்கையாக இருந்து ஆணாக மாறி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதால் இவரது அண்ணன்கள் முருகன், அழகுமலைக்கு பிடிக்கவில்லை. இதனால் இரு அண்ணன்களும், தம்பி கணேசனை அரிவாளால் விரலில் வெட்டி காயப்படுத்தினர். மேலும் அழகுமலையின் மனைவி சின்னழகு என்பவர்கணேசனை அடித்துள்ளார். தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கணேசன் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!