டூவீலர் மீது லாரி மோதி ஒருவர் பலி
தேவதானப்பட்டி, : திண்டுக்கல் மாவட்டம் கன்னிமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜன் 35.திண்டுக்கலில் இருந்து பெரியகுளம் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது நண்பர் ராமகிருஷ்ணன் 35. பின்னால் உட்கார்ந்திருந்தார்.
தர்மலிங்கபுரம் சில்வார்பட்டி பிரிவு அருகே பின்னால் வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சண்முகராஜன் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.-
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!