விதி படி கட்டடங்கள்; ஆர்.டி.ஓ., கெடு
பழநி, : பழநி வையாபுரி குளத்தில் நேரடியாக கழிவு நீர் கலப்பதை தடுக்க, பொது கட்டடங்கள் முறையாக உரிமம் பெற ஆர்.டி.ஓ., சிவகுமார் கெடு விதித்துள்ளார்.
பழநி வையாபுரி குளத்தில் கழிவு நீர் கலப்பதால் அமலை செடிகள் மிகுந்து சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இதில் உள்ள செடிகள்,குப்பை அகற்ற நகராட்சி, வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் தன்னார்வலர்கள், பொது அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறு நாயக்கன் குளம், வையாபுரி குளத்தின் அருகில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவு கூடங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது கட்டடங்களில் இருந்து நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க, மார்ச் 24 க்குள் விளக்கம் அளிக்க, 121 நிறுவனங்கள், அரசு துறை அதிகாரிகளுக்கு ஆர்.டி.ஓ.. கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!