Load Image
Advertisement

நடிகைகளுடன் உல்லாசம் அனுபவிக்க கொள்ளையடித்த கேரள ஆசாமி கைது

Tamil News
ADVERTISEMENT


பண்ருட்டி, : பண்ருட்டி பூச்சி மருந்துக் கடையில் 4.70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில், துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க, செலவு செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி தாயார் அம்மாள் நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடலுார் சாலை காந்தி பூங்கா வளாகத்தில் பூச்சி மருந்துக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதாக, 10ம் தேதி வந்த தகவலின்படி, முத்துக்குமரன் கடைக்கு வந்து பார்த்தார். கடையில் வைத்திருந்த 4.70 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.

நேற்று காலை 8:30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையத்தில் சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் பகுதியைச் சேர்ந்த ஷாகுல்ஹமீது, 60, என தெரிய வந்தது. கடலுார் சாலையில் உள்ள பூச்சி மருந்துக் கடையில், அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் மீது திருசெங்கோடு, தஞ்சாவூர், சேலம், கும்பகோணம், மதுரை, தென்காசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. திருடிய பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசமாக செலவு செய்து வந்ததும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட ஷாகுலிடமிருந்து, 1.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement