ADVERTISEMENT
மதுரை, : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக உண்ணாவிரதம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜோசப் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செந்தட்டி காளை முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் பெலிக்ஸ் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் கணேசன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பொதுச்செயலாளர் பிரபாகரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கணேசன், தனலட்சுமி, கண்ணன், குருவம்மாள் வாழ்த்தி பேசினர்.
உண்ணாவிரதத்தை செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் முடித்து வைத்தார். பொருளாளர் மரியசெல்வம் நன்றி கூறினார்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!