Load Image
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் டிவைடர் ஆன ஒளிரும் குச்சிகள்

Tamil News
ADVERTISEMENT


ஆண்டிபட்டி, : கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஆண்டிபட்டியில் ஆபத்தான வளைவுகள், நெருக்கடியான இடங்களில் ரோட்டின் மையத்தில் டிவைடராக ஒளிரும் பிளாஸ்டிக் குச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டிபட்டி கணவாய் மலை முதல் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் 10 க்கும் மேற்பட்ட ஆபத்தான வளைவுகள் போக்குவரத்திற்கு நெருக்கடியான இடங்கள் உள்ளன.

வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லுதல் அஜாக்கிரதையாக வாகன ஓட்டுதல் போன்றவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காக 4 இடங்களில் ஏற்கனவே ஒளிரும் பிளாஸ்டிக் குச்சிகளை டிவைடராக ரோட்டின் மையத்தில் அமைக்கப்பட்டது.

ஆண்டிபட்டி டி.எஸ்.பி., ராமலிங்கம் ஏற்பாட்டில் தற்போது கூடுதலாக 7 இடங்களில் ஒளிரும் குச்சிகள் ரோட்டின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஆபத்தான இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அமைக்கப்படும் தற்காலிக வேக தடுப்புகள் வாகனங்களால் அடிக்கடி சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படுகிறது.

ஆபத்தான இடங்களில் தற்போது புதிய முயற்சியாக ஒளிரும் குச்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement