Load Image
Advertisement

பாடங்களை முன்கூட்டியே நடத்தாதீர் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

புதுடில்லி,-'மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான பாடங்களை ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்னதாக நடத்தக்கூடாது' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பள்ளிகளை எச்சரித்துள்ளது.
Latest Tamil News

சி.பி.எஸ்.இ.,யின் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முறையே மார்ச் 21 மற்றும் ஏப்ரல் 5ம் தேதிகளில் நிறைவடைய உள்ளன.

இந்நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை இப்போதே நடத்த துவங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, அடுத்தாண்டு பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை நடத்த துவங்கியுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, சி.பி.எஸ்.இ., அமைப்பின் செயலர் அனுராக் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுஉள்ளதாவது:
Latest Tamil News
சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை முன்கூட்டியே நடத்த துவங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இது, மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதுடன், அவர்களுக்கு கவலையையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும்.

எனவே, திட்டமிட்ட கல்வித் திட்டத்தின் அடிப்படையில், ஏப்ரல் 1க்குப் பின் தான் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை நடத்த வேண்டும். இதை, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், கட்டாயம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • அப்புசாமி -

    ஆமாம். பரிட்சைக்கு முதல் நாள் நடத்தினாப் போறும். அப்படியே புரிஞ்சிக்கிட்டு கவலை இல்லாம பரிட்சை எழுதுவாங்க. பசங்களா, இப்பவே படிக்கிறேன்னு கெளம்பிடாதீங்க. அப்பறம் ஆல் பாஸ் போட்டு உங்களை டம்மி பீஸ் ஆக்கிருவாங்க.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    வெறும் எச்சரிக்கை மட்டும்தானா? சி பி எஸ் சி க்கு கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்து பள்ளி நடத்துகிறார்கள்.... நீங்கள் சொல்வதைக் கேட்பார்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்