Load Image
Advertisement

ஆவின் பால் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்

புதுக்கோட்டை மார்ச்: எதிர்க்கட்சி மேல் பழி போடாமல் ஆவின் பால் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது, ஆவின் பால் பிரச்னைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் தமிழக அரசு தான் விவசாயிகள் பிரச்னையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பல கட்சிகள் பயந்தபோது தே.மு.தி.க. தைரியமாக போட்டியிட்டது.

தி.மு.க. கட்சி நிர்வாகிகளே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அடித்து நொறுக்குவது சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதவது தான் திராவிட மாடல். பல அமைச்சர்கள் நடவடிக்கை மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளது. இதுதான் திராவிட மாடல். அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement