கட்சியில் ஏகப்பட்ட பிரச்னை பிரிவுகளுக்கிடையே பொதுச்செயலர் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு: அ.தி.மு.க. சட்ட திட்ட விதியின்படி பொதுச் செயலர் கட்சி அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அந்த விதிமுறையின்படி பொதுச் செயலர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது.
இன்று காலை வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மதியம் 3:00 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். நாளை மதியம் 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிவடைகிறது.

வேட்பு மனுக்கள் மார்ச் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை மார்ச் 21ம் தேதி மதியம் 3:00 மணி வரை திரும்ப பெறலாம்.
போட்டி இருந்தால் மார்ச் 26ம் தேதி காலை 8:00 முதல் மாலை 5:00 வரை ஓட்டுப்பதிவு நடக்கும். மறுநாள் 27ம் தேதி காலை 9:00 மணி முதல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். பொதுச் செயலர் பொறுப்புக்கு போட்டியிட விரும்பும் கட்சியினர் தலைமை அலுவலகத்தில் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று அதை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
பொதுச் செயலர் தேர்தலில் ஓட்டுப்பதிவு நடந்தால் மாவட்ட கட்சி அலுவலகம் உள்ளிட்ட 84 இடங்களில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (18)
Hilarious to note the election of g.secretary for edapadi AIADMK.who will file nomination against him. If any bidy our Jayakumar will act immediately along with shanmugam. IDHU ORU POZHUPPA.
தமிழ்நாட்டை தற்சமயம் சூறையாடிக்கொண்டு இருக்கும் தீய சக்தியை அதிமுகவால் மட்டுமே மீட்க முடியும். அதாவது எடப்பாடி கே பழனிசாமியை தலைமையாக கொண்ட அதிமுகவால். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இரண்டு பேரும் அதிமுக வாக்குகளை டேமேஜ் செய்ய திமுகவுக்கு அல்லக்கைகளாக செயல்பட்டார்கள், படுகிறார்கள், படுவார்கள். கட்டுமர மாஃபியாவின் வாரிசு என்ற ஒற்றை தகுதியுடன் ஒரு தத்தி, தற்குறி கைல சிக்கி தமிழ்நாடு சின்னாபின்னமாகி நாறிக்கொண்டு இருக்கிறது. பத்து வருடங்களாக காய்ந்து போய் கிடந்த கும்பல் இப்போது லஞ்சம் ஊழல், கமிஷன், ரவுடித்தனம், மணல்கொள்ளை, மிரட்டி பணம் பறிப்பது, கட்டப்பஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று தமிழ்நாட்டை சூறையாடிக்கொண்டு இருக்கிறது. நோட்டாவோடு மட்டுமே போட்டி போடும் பாஜகவால் ஒன்றும் பண்ண முடியாது. தவிர பாஜக திமுக அண்டர்க்ரவுண்ட் பிஸ்னஸ் டீலிங் குறித்து தமிழக மக்களுக்கு சந்தேகம் வலுக்க தொடங்கி விட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அது நிரூபணம் ஆகிவிட்டது. பாஜக ஆசிபெற்ற மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் ஆசியுடன் திமுக நடத்திய அயோக்கியத்தனத்தை கண்டும் காணாமல் இருந்தது. டென்ட்டுக்குள் வாக்காளர்களை அடைத்து வைக்கும் ஃபார்முலா என்ற பெயரில் இந்தியாவிலேயே கேவலமாக நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பறக்கும் படை பணபறிமுதல் பரிசுப்பொருட்கள் பறிமுதல் என்று எதுவும் செய்யாமல் ஆடுங்கடா என்று ஃப்ரீயாக விட்டது. பாஜக முதலில் அழிக்க நினைப்பது திமுகவை அல்ல, அதிமுகவை என்று லேட்டாகத்தான் அதிமுகவினர் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதிமுகவை சேதப்படுத்தாமல் பாஜகவால் தமிழ்நாட்டில் வளரவே முடியாது. இந்த மொள்ளமாரித்தனம் தெரிந்தததால்தான் ஜெயலலிதா பாஜகவை தனது பக்கம் அண்டவிடாமல் தள்ளியே வைத்து இருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்த கையோடு பாஜகவை கழட்டிவிடுவது அதிமுகவுக்கு நல்லது.இஸ்லாமிய கிருஸ்தவ மற்றும் க்ரிப்டோ கிருஸ்தவ வாக்குகள் கிட்டத்தட்ட இருபது சதவிகிதம் இருக்கும். அதில் கால் சதவிகிதத்தை கூட பாஜகவை வைத்துக்கொண்டு அதிமுகவால் தொட முடியாது. பாஜக வேண்டுமானால் பாமக தேமுதிக அமமுக, போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணியமைத்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றிக்கொள்ளட்டும் என்று காலை சுற்றிய பாஜகவை கழட்டி கடாச வேண்டும் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டைஇலை மூன்றும் அதிமுகவின் எவர்க்ரீன் சக்ஸஸ் பிராண்ட். எடப்பாடி பழனிசாமி அவர்களே துரோகிகளை கழட்டி விடாமல் எதிரியை ஒருக்காலும் வெல்லமுடியாது.
கட்சியை பிளவு படுத்தி ஆதாயம் அடைய நினைத்தவர்கள் நிலை தான் பரிதாபம் ஆகும். .
குடும்ப கட்சிகளில் இது மாதிரி தேர்தல் நடத்த முடியுமா . அதிமுகவில் தேர்தல் நடத்துவது பாராட்ட மனமில்லாமல் குறை கூறி பயனில்லை .
நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா எல்லாம் சும்மாவா!? அண்ணாமலை அடி அதிமுகவுக்கு வேறு மாதிரி இடியாக விழும். எடப்படியயார் அம்மையார் அளவிற்கு புத்திசாலி இல்லை என்பது எல்லோரும் அறிந்ததே.