இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்கிறது. அஷ்வின் 23 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த புஜாரா (7) நீடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 12 ரன்னில் திரும்ப, அறிமுக வீரர் சூர்யகுமார் 8 ரன்னில் போல்டானார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித், டெஸ்ட் அரங்கில் 9 வது சதம் எட்டினார்.

ஒருநாள், 'டி-20', டெஸ்ட் என மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய முதல் இந்திய கேப்டன் ஆனார். இவர் 120 ரன் எடுத்து வெளியேறினார். அறிமுக விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும் தன் பங்கிற்கு 8 ரன் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 321 ரன் எடுத்து 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!