Load Image
Advertisement

ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ்

புதுடில்லி: ராகுல் லோக்சபாவில் பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி உரிமைமீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Latest Tamil News



ராகுல் நேற்று(பிப்.,07) லோக்சபாவில் பேசுகையில், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில், அதானி உடன் வந்தது எத்தனை முறை? நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின், அவர் உங்களுடன் இணைந்தது எத்தனை முறை? நீங்கள் பயணம் முடித்து திரும்பிய பின், அந்த நாட்டுடன் அதானி போட்ட ஒப்பந்தங்கள் எத்தனை?.

இவ்வாறு கூறிவிட்டு, பிரதமரும், அதானியும் விமான பயணத்தில் ஒன்றாக இருக்கும் படத்தையும், பின்புறம் அதானி நிறுவனத்தின் 'லோகோ' இருக்க, பிரதமர் உரையாற்றுவது போல ஒரு படத்தையும் ராகுல் துாக்கிப்பிடித்தார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?. மக்கள் அதனை தெரிய விரும்புக்கின்றனர். அதானிக்காக சட்டம் வளைக்கப்பட்டுள்ளது என பேசினார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் குறித்து ராகுல் பேச்சுக்கு எதிராக பாஜ.,வினர் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுலுக்கு எதிராக பா.ஜ., எம்.பி நிசாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Latest Tamil News


ஊழல்வாதிகளை பாதுகாப்பதுதான் காங்.,





இது குறித்து பா.ஜ., மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மீது காங்., எம்.பி ராகுல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்திய மிகப்பெரிய ஊழல்களை அனைத்திலும் காங்கிரஸ் தலைவர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழல் செய்வதும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதுதான் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தின் சரித்திரம். இவ்வாறு அவர் கூறினார்.




பிரகலாத் ஜோஷி





இது குறித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசியதாவது: பா.ஜ., குறித்து ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். ராகுல் பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (15)

  • பேசும் தமிழன் -

    என்ன பப்பு ....ஊழல் என்றாலே ... காங்கிரஸ் கட்சி தானே நினைவுக்கு வருகிறது....யார் தான் ஊழலை பற்றி பேசுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது....இது எப்படி இருக்கு என்றால்....சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    பைத்தியக்காரத்தனத்தின் உச்சம் ராகுல். இவருக்கு மூளை கலங்கி இருக்கிறது என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது, மூளை இல்லாதவர்களுக்கு எது கலங்கும்?

  • K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா

    ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஊழல்வாதிகள் மீது...

    • Narayanan Muthu - chennai,இந்தியா

      நடவ்டிக்கைல்லாம் எதுவும் எடுக்க மாட்டோம். சும்மா மெரட்டுவோம் பாஜக அரசியல் ஆதாயம் பெற.

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

    பாட்டையா போகாம

  • Krish - Chennai ,இந்தியா

    முதலில் நீங்க சைனாவில் போட்ட ஒப்பந்தத்தை மக்களுக்கு சொல்லுங்க ப்ப்பு அவர்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement