Load Image
Advertisement

பிராயச்சித்த கும்பாபிஷேகம்: வானதி வலியுறுத்தல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கை:

பழநி முருகன் கோவிலில கட்டுமான பணிகள் முடிவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஜனவரி 27ல் கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. ஆகம விதிகளை பற்றி துளியும் கவலைப்படாமல், அறநிலைய துறை அனைத்தையும் செய்துள்ளதாக பக்தர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

தடையின்றி மண்டலாபிஷேகம் நடக்க வேண்டுமானால், இடையில் பெரும் திருவிழாக்கள் வராமல் இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் தைப்பூசம் வருகிறது என்பது தெரிந்தும், பழநியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அறநிலைய துறை விளக்கம் அளிக்க வேண்டும்.

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள், அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர், கோவில் கருவறைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது.

இது, அப்பட்டமான ஆகம மீறல். ஹிந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். இதற்காக, அமைச்சர் உள்ளிட்டோர், முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், 'பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என, கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று, உடனடியாக பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (9)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஏன் தட்டுலே தட்சணை விழல்லையா, வருமானம் இரட்டிப்பாக்குறேன்னு சொன்னதுக்காக நீங்க இதை செய்றீங்களா ?

    • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

      பொய்பக்கிஸ்தான்புறம், அது அப்பிடியேல்ல....உங்களை போன்ற மூர்க்க கும்பலிடம் பிச்சையெடுத்து தின்னும் 21.பக்க கழிவு திராவிடியாகும்பல்களின் பாவங்களுக்கு வினையாக குஷ்டரோகம் வந்து அதுகள் கஷ்டப்பட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இதை செய்கிறார்கள்..அந்த நல்ல எண்ணமெல்லாம் உன்னை போன்றதுகளுக்கு புரியாது

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    ஏன் இவ்வளவு நாள் ஆனபின் சொல்கிறீர்கள் ?

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

      சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காதும்பா.. அது மாதிரி தான் இதுவும்.

    • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

      யோசித்து யோசித்து சொல்கிறார்கள்

  • muthu - tirunelveli,இந்தியா

    Why lord Murugan did not speak to stop the minister entry if lord himself not interested minister entry . This is all political game. To my opinion lord himself permitted minister entry. Let lord muruga speaks for remedy

  • Gopalakrishnan S -

    அசுர பலம் கொண்டு ஹிந்துக்கள் குரலை ஒடுக்கும், பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த விடியாத ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்ப்பது ?

    • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை

      ஆதொள கீர்த்தனாரம்பத்திலே.. அங்கிருந்து ஆரம்பிங்கோ.. அப்பத்தான் நன்னா இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement