Load Image
Advertisement

இந்திய குடியுரிமை வழங்க கலெக்டர்களுக்கு அதிகாரம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க, ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இல்லாமல், குடியுரிமை சட்டம் 1955ன் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
Latest Tamil News இதற்கான விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், குடியுரிமை உடனடியாக கிடைக்கவும், ஒன்பது மாநிலங்களை சேர்ந்த 31 மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் புதுடில்லியை சேர்ந்த 31 கலெக்டர்கள் குடியுரிமை வழங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து (9)

  • Sridhar - Colombo ,இலங்கை

    Tamilana piranthu naanga kasta padurom pa naa oru srilankan engalukku indian citizens edukka mudiyatha???

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    தமிழகத்தில் யாரையும் நம்பமுடியாது. இவர்களை ஹிந்துக்களாக மாற்றி குடியுரிமை பெற்று பிறகு மதம் மாற வகை செய்வார்கள் இந்த கயவர்கள்.

  • Tamilnesan - Muscat,ஓமன்

    ஏற்கனவே பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்னை பேருந்து மற்றும் புறநகர் ரயில்களில் சர்வ சாதாரணமாக பயணம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல, மொபைல் திருட்டு, செயின் அறுப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்தியர்களே அடுத்துவரும் சில வருடங்களில் பங்களாதேஷ் நாட்டிற்கு அடிமையாக இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள்.

  • Murthy - Bangalore,இந்தியா

    தமிழன் இந்து அல்ல என்பதற்கு இதுவே போதும்.

    • vijay - coimbatore,இந்தியா

      //.. தமிழன் இந்து அல்ல என்பதற்கு இதுவே போதும்...// ஹிந்து என்பது மதம் அல்ல, அது ஒரு வாழ்வியல் முறை, பல்வேறு தெய்வ நம்பிக்கைகளை கொண்டது.

    • Sivak - Chennai,இந்தியா

      தமிழ் என்பது மொழி ஹிந்து என்பது மதம்..இந்த சிறு அறிவு கூட இல்லையா ? அப்ப இஸ்லாம் என்பது மதம் அவர்களும் தமிழர்கள் இல்லைதானே ..... காத்தாலேயே டாஸ்மாக் டானிக் வேலை செய்யுதா? வந்துட்டான்

    • visu - tamilnadu,இந்தியா

      கடவுளே இல்லை என சொன்ன நாத்திகவாதிகள் இன்று சைவம் /வைணவம் /கௌமாரம் உள்ளது என்று கதற வைத்துவிட்டார்கள் .இவையெல்லாம் சர்ந்ததுதான் சனாதனம் அதர்க்கு இன்றய வழக்கில் இந்து என்றும் பொருள்

    • visu - tamilnadu,இந்தியா

      எப்படி முஸ்லீம் பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டின் அணைத்து மக்களுக்கும் இந்தியா குடியுரிமை கொடுக்க முடியும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கேள்வி எழுப்புகிறார்கள் அதர்க்கு அந்த நாட்டையே இந்தியாவுடன் இணைத்து விடலாமே

  • GMM - KA,இந்தியா

    பாக். ஆப்கான், வங்காளதேசம் சிறுபான்மை மக்கள் இனி அங்கு வாழ்வது கடினம். இஸ்லாம் மத நிர்வாகம் பிற சிறுபான்மை மக்கள் நில பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியா தான் ஏற்க முடியும். விரைவாக நடவடிக்கை எடுக்க சிறந்த முடிவு. இதனை online மூலம் விண்ணப்பித்து தற்காலிக உரிமை பெற்று, பின் நேரிடையாக ஆவணங்கள் சமர்ப்பித்து நிரந்தர குடியுரிமை மாவட்ட ஆட்சியர் வழங்க அனுமதிக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up