அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் நிதி ஆய்வு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை உலக முதலீட்டாளர்களை அச்சத்திற்குள்ளாக்கியது. அதானி குழுமம் கணக்குகளில் மோசடி செய்ததாகவும், பங்கு விலையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாகவும் கூறியது. அடுத்த சில நாட்களில் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பில் 10 ஆயிரம் கோடி டாலரை இழந்தது. இதனையடுத்து அதானிக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள், அதில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் மீது கவனம் திரும்பியது. பொதுத் துறை வங்கிகளான எஸ்.பி.ஐ., பஞ்சால் நேஷனல் வங்கி உள்ளிட்டவை பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் தந்துள்ளன. எல்.ஐ.சி., நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் இவற்றின் பங்குகளும் கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தன.

கடந்த வாரம், எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா, அதானி குழுமம் கடன்களை ஒழுங்காக திருப்பிச் செலுத்தி வந்துள்ளது. அதானி குழும திட்டங்களுக்கு உறுதியான சொத்துக்கள் மற்றும் போதுமான பணப்புழக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே கடன் வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.
வாசகர் கருத்து (28)
Global banks are ramping up their scrutiny of the group following the Hindenburg report. Citigroup Inc.'s wealth arm has stopped accepting Adani securities as collateral for margin loans, following a similar move by Credit Suisse Group AG.
முதலில் நிதி திரட்டுவதில் பல நிறுவனங்கள் கோல்மாலில் ஈடுபடுவது இந்தியாவில் தொன்று தொட்டு வரும் மரபு. பங்குச்சந்தைக்கு தயார் செய்யும் பொழுதுதான் பழைய குப்பைகளை புதைத்து புதிய நிறுவனம் நேர்மையாளர் போல மின்னும். கட்டுமரத்தின் முக்கிய நிறுவன லீலைகள் முதற்கொண்டு டாட்டா வரை இது போலத்தான். கொலை டீவியில் யார் யார் பங்குதாரர், டைரக்டர் என்று சரிபார்த்தால் இவர்களின் லீலைகள் புரியும்.
நீங்க அதானியை பாராட்டுறீங்களா இல்லை கழுவி ஊத்துறீங்களா ?
கடன் கொடுத்தவன் கடனை திருப்பித் தருவானான்னு கணக்கு கேட்டா, இந்த கடன்காரன், கடன் கொடுத்த எஸ்பிஐ க்கு இந்த பணம் ஒன்னும் பெருசில்லே, சமாளிச்சுக்குவாங்கன்னு அறிக்கை தாரான். தக்காளி எங்கேருந்துடா கெளம்பி வந்திருக்கீங்க. ஏற்கனவே Yes Bank ஊழலை எஸ்பிஐ தலையிலே கட்டி விட்டீங்க. நல்லா வருவீங்கடா நீங்க.
போறான் வாரான் தோட்டத்திலே ஒருத்தன் வெச்சான் கத்தரிக்கா. காசுக்கு ரெண்டு விக்கச்சொல்லி கடுதாசு போட்டான் வெள்ளைக்காரன். அதானிக்கு கியாரண்டி கொடுக்குறவன் கடன் கொடுத்தவன் கிடையாது. கடன் கொடுத்த எஸ்பிஐ வாயை மூடிக்கிட்டு இருக்க சொல்லி உத்தரவு. இந்த கியாரண்டி தாறவனும் கடன் திருப்பி தருவார் அதானின்னு சொல்லல்லே.
இவ்வளவு நாளா என்னபண்ணி இப்போ இந்த பதிலை கண்டுபுடிசீங்க ? முதலில் மறுக்கவில்லை, இப்போது பதில் வருது, ஒன்னும் சரியா பாடலையே