Load Image
Advertisement

பெட்ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவு அதிகரிப்பு

புதுடில்லி- உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் அளவைக் குறைக்கும் முயற்சியாகவும், பெட்ரோலுடன் தற்போது கலக்கப்படும் எத்தனாலின் அளவை, 10 சதவீதத்திலிருந்து, 20சதவீதமாக உயர்த்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
Latest Tamil News

முதற்கட்டமாக, இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, மூன்று அரசு எரிபொருள் சில்லரை விற்பனையாளர்களின் 84 பெட்ரோல் நிலையங்களில், விற்பனை நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
Latest Tamil News
பெட்ரோலில் எத்தனாலின் அளவு 1.5 சதவீதம் என்று இருந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் கலக்கப்படும் எத்தனாலின் அளவு 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்த அளவை 2025ம் ஆண்டுக்குள், 20 சதவீதமாக உயர்த்துவதற்கு, தற்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை, தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் துவக்கப்பட்டு உள்ளது.

இந்தியா, தற்போது 85 சதவீத கச்சா எண்ணெயையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதை எதிர்காலத்தில் குறைத்திடவும், கார்பன்அளவை குறைக்கும் முயற்சியாகவும், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்காக கரும்பு, உடைந்த அரிசி மற்றும் பிற விவசாய பொருட்களில் இருந்து எடுக்கப்படும் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதால், கார்பன் மோனாக்சைடு வெளியேறுவது இருசக்கர வாகனங்களில் 50 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 30 சதவீதமும் குறைக்கப்படும்.

மேலும், இதன் வாயிலாக, கரும்பு விவசாயிகள் கூடுதல் வருமானத்தை ஈட்டவும் முடியும். கடந்த எட்டு ஆண்டுகளில், 49 ஆயிரம் கோடி ரூபாயை விவசாயிகள் வருமானமாக ஈட்டியுள்ளனர்.

மேலும் அரசிற்கு 59,894 கோடி ரூபாய் அன்னியச் செலவாணியும் மிச்சமாகியுள்ளது.


வாசகர் கருத்து (14)

  • Balaji Subbiah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    ஆனா பெட்ரோல் விலை குறைக்க மாட்டோம். அந்த பணமும் மத்திய அரசு கஜானாவுக்கு போய்டும்.

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    What is ethanol in simple words? Ethanol, also known as ethyl alcohol, drinking alcohol or grain alcohol, is a flammable, colorless, slightly toxic chemical compound, and is best known as the alcohol found in alcoholic beverages.

    • DVRR - Kolkata,இந்தியா

      எத்தனால் என்பது 93% முதல் 99% வரை ஆல்கஹால் அதாவது எதைல் ஆல்கஹால். ஆனால் பீரில் 4%-முதல் 8% மட்டுமே எத்தில் ஆல்கஹால் மறைத்து தண்ணீர் அதை போலவே விஸ்கியில் 45% முதல் 48% வரை ஆல்கஹால். வேடிக்கை என்னவென்றால் பெனாட்ரில் என்னும் இருமல் மருந்தில் 17% ஆல்கஹால். எல்லா ஹோமியோபதி மருந்தும் ஆல்காஹாலில் கலந்து விற்கப்படுகின்றது. இவைகளை நாம் 10 துளிகள் முதல் 20 துளிகள் மட்டுமே உட்கொள்கின்றோம். இருமல் மருந்து 1 டீஸ்பூன் உட்கொள்கின்றோம். எத்தனால் விற்பனையினால் எத்தனால் தயாரிப்பாளர்கள் 6% மட்டுமே லாபம் அடைகின்றார்கள் (என்னுடைய DPR /Report விளக்கமாய் சொல்கிறது இதை). இப்போது ரூ 45 முதல் மிக மிக அதிகமாக ரூ 55 ஒரு லிட்டர் எத்தனால் விலை நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஆனால் இதே எத்தனாலை விஸ்கி பீர் செய்து விற்பனை செய்தால் லாபம் 22% முதல் 31% வரை அனுபவிக்கலாம்.

    • DVRR - Kolkata,இந்தியா

      அப்போ இன்னைக்கி நான் போட்ட பெட்ரோலில் 20% எதனாலா கலந்து உள்ளது ஓகே

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

    வெள்ளை வெட்டி பசி மௌன சாமீ போல் கடனை வாங்கி தள்ளாம வெட்டி வேலை பண்ணுது பாஜக

  • Suppan - Mumbai,இந்தியா

    மதுவைக் குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள் என்கிறார்கள். வண்டிக்கே மது கலந்த பெட்ரோலை ஊற்றினால் அது நேர்பாதையில் போகுமா இல்லை தள்ளாடுமா ? ஒரு "குடிமகனின்" புலம்பல்

  • அப்புசாமி -

    பேசாம பெட்ரோலையே வாங்கி குடிச்சிடலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up