சென்னை: தைப்பூச திரு நாளான இன்று(பிப்.,05) தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்கதர்கள் குவிந்தனர். பால்குடம் சுமந்து , அலகு குத்தி, காவடி எடுத்து, மொட்டை அடித்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பழநி:
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக குவிந்தனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. காவடி, அலகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிப்பட்டனர்.
திருச்செந்தூர்:
தென் மாவட்டங்களில் உள்ள மக்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள் அரோகரா கோஷத்துடன், வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தி, காவடி எடுத்து பாதையாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டம் கடற்கரையில் கடல் போல் காட்சியளித்தது.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் அலை மோதியது. பக்தர்கள் வரிசையில் அமைதியாக நின்று சாமி தரிதனம் செய்தனர்.
வடபழநி:
வடபழநி ஆண்டவர் கோவிலில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர், முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, பக்தர்கள் எடுத்து வந்த பாலால், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின், செண்பகப்பூ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
வெளிநாடுகளிலும் கோலாகலம்
வெளிநாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா , மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் வாழும் தமிழர்கள், பல்வேறு பகுதிகளில், பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (4)
முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா. பழனி ஆண்டவருக்கு அரோஹரா
திமுக காரனை மட்டும் சேக்காதீங்க
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா