அ.தி.மு.க.,வில் பழனி சாமி தரப்பினர், கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்திய பொதுக் குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்; ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு, வரும் 27ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில், பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதனால், கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்தது.இதையடுத்து, பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 'என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க, தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.
'எனவே, என்னை அ.தி.மு.க., இடைக்காலப் பொதுச் செயலராக அங்கீகரித்து, நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு, கடந்த மாதம் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இடையீட்டு மனு தொடர்பாக, தேர்தல் ஆணையம் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 'மனு நகல்களை, பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்புக்கும் வழங்க வேண்டும். பன்னீர்செல்வம் தரப்பும் தன் பதிலை தெரிவிக்க வேண்டும்' எனக் கூறி, விசாரணையை பிப்., 3க்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது.அந்த உத்தரவை ஏற்று, தேர்தல் ஆணையம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலராக பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை. ஏனெனில், கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. அந்த பொதுக்குழு கூட்டப்பட்டதும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும் கேள்விக்குறியாகி உள்ளது.இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை, ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. கட்சிகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை.
இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பிலும், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'அ.தி.மு.க., பிரதிநிதி என்ற முறையில், பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அவர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 'பொதுக்குழு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக் கூடாது. பழனிசாமி இடையீட்டு மனு, நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது' என கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் கமிஷன், ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: பழனிசாமி - பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும். இதற்காக பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தெரிவிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
வாசகர் கருத்து (30 + 45)
மறுபடியும் மொதல்லே இருந்தா. ஆடீம்காவை எப்படி அழிக்கிறதுன்னு டீம்கா யோசிக்க வேண்டியதில்லை. கூட இருந்து பாஜாக்கவே நல்லா வெச்சி செய்றாங்க.
கொலை, கற்பழிப்பு வழக்கு எல்லாம் பத்து வருஷம் இருபது வருஷம் ன்னு இழுக்கிற கோர்ட் , இந்த மாதிரி வழுக்குகெல்லாம் ஒரு வாரத்துல தீர்ப்பு சொல்றது எப்படின்னு புரியலை , நாடு வல்லரசு எல்லாம் ஆக வேணாம், சோமாலியா , உகாண்டா மாதிரி ஆகாம இருந்த சரி....
இலை யாருக்கு சொந்தம் என்பது முடிவேயில்லாதது.
திருட்டு ரெயில் புகழ் திருக்குவளை தீய சக்தியை அடக்கி ஒடுக்கி வைக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்
இரட்டை இலை சின்னம் : தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு எடுப்பார் (8)
கட்சி சின்னம் என்பதை ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.அப்போதுதான் சின்னம் பிரச்னை வராது
தேர்தல் அலுவலர் மாநில அரசு அதிகாரிதானே? அப்போ ரிசல்ட் 😎😎 கன்பார்ம்.
உச்ச கோர்ட் முடிவெடுக்காமல் தேர்தல் நடத்தும் ஆணையத்திடம் பந்தாடுவது கோழைத்தனத்தின் உச்சம்
தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனிப்பட்ட முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என நம்புபவன்........ ஆங் அதேதான்
நம்புபவன் கண்டிப்பாக உபியாக இருக்க மாட்டான்!
அப்ப சின்னம் ஒபிஎஸ் க்கு தான்........?.....
ஐயா சாமி தேர்தல் அதிகாரிகளா இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த கேஸை ஜவ்வு மிட்டாயா இழுக்க போறீங்க?உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் இப்படி மழுப்பலாக பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்?போற போக்கை பார்த்தால் ஈஸியா முடிய வேண்டிய மேட்சை ஆறு ரன்னுக்கு ஒரு பந்து என்ற கணக்கில் கொண்டாந்து விட்ருவீங்க போல இருக்கு!
பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்: அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு (36)
மறுபடியும் முதல்ல இருந்தா
Last date for filing nomination for Salem bye election is 07.02.2023. In the circumstances, the judgement of SC is practically not possible for want of time. SC has given judgement but not implementa due to time constraints. Hats off to SC.
திமுக எப்படியும் அதிகார பலத்தைப்🙁 பயன்படுத்தி வெல்லும். இரட்டை இலையைப் பெற்றும் ஜெயிக்காவிட்டால்( வாய்ப்பதிகம்) கட்சிக்கு மூடுவிழா. இதனைத் தவிர்க்க டம்மி சுயேச்சை ஆளை ஆதரித்து தப்பிக்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இடையூட்டு மனு தாக்கல் செய்தாரோ அது முற்றிலும் புறக்கணிக்க பட்டுள்ளது. இவர் வேட்பாளர் தேர்ந்து கையொப்பம் இட முடியாது. பொது குழுவில் பன்னீர் செல்வம் கலந்து கொள்ள முடியும், இவரை தற்போது இடைக்கால பொது செயலாளர் என்று இன்று அங்கீகரிக்கவில்லை. அவை தலைவர் தான் தேர்தல் ஆணையம் பாரத்தில் கையொப்பம் இட முடியும். அப்போது தான் ரெட்டை இலை சின்னம் கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமி கையொப்பம் இட முடியாது.
முட்டு விலை வீழ்ச்சி..... 1க்கு 200 ரூபாய் வீழ்ச்சி அடஞ்சி 5 க்கு 200 போல ஆயிடிச்சி..பாவம்.
சரி ~ இரட்டை இலை இந்த தேர்தலில் எ டப்பாடி கிடைச்சிருக்கு வைசுப்போம் ~ இரட்டை இலை வைச்சு எ ட ப் பாடி வெற்றி பெறுவாரா ~ மாட்டார் ~ படு தோல்வி தான் கிடைக்கும் ~ இதுக்கு தான் இந்த அக்க போர் ~ நாங்க ( o p s ) அணி சுயேச்சை நிப்பாட்டி வாக்குகளை பிரிப்போம்
தீர்ப்பு குடுக்க ஏன் தாமதம்? ரெட்டை இலை மற்றும் உதைசூரியன் ரெண்டையும் முடக்க வேண்டும். எல்லாம் ரீ ஸ்டார்ட்
பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு, பொதுக்குழு உறுப்பினர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்
ஒரே கொய்பமா இருக்கு பன்னீர் அதிமுக இல் இருக்காரா இல்லையா பொது குழு கடிதம் வரவில்லை நு யாராவது சொ ல்லுவாங்களா ஒரே கொய்ப்பம் ஆ இருக்கு
பாஜகவின் உண்மையான நோக்கம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து திமுகவை தோற்கடிப்பது மட்டும்தான்.ஆனால் எடப்பாடியின் உண்மையான நோக்கம் பன்னீரை கழட்டி விட்டு அதிமுகவை கைப்பற்றுவது மட்டும்தானே தவிர கட்சியின் வெற்றியை பற்றி அவருக்கு சிறிதும் கவலையில்லை.இப்படிப் பட்ட சூழ்நிலையில் கடைசியாக பாஜகவிற்கு இருக்கும் ஒரேவழி எடப்பாடி வழிக்கு வரவேண்டும் அப்படி அவர் வராத பட்சத்தில் அவரை காலி பண்ணிவிட வேண்டும்.இதுதான் இப்போது இருக்கும் அரசியல் நிலவரம்!
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால் எடப்பாடியை எப்படி காலி செய்வது?
பொது குழு பழனியால் தனக்கு வேண்டிய அல்லக்கை கைகளை தேர்வு செய்து உருவாக்கினான் அவநூக்கல் பழனிக்குதான் விசுவாசமாக இருப்பானுகள் எனவே ஓ பி எஸ் நிலைமை பரிதாபம் ப ஜ க வும் உச்ச நிதி மன்றமும் சேர்ந்து பன்னீரிடம் கண்ணாம் மூச்சி விளையாட்டைக் காட்டுகிறார்கள் பன்னீர் இதை ஏற்றால் எடப்பாடி பண்ணீருக்கும் பெப்பே ப ஜெ க விற்கும் பெப்பே காட்டுவான் அவன் ஒரு அக்மார்க் அம்மைசை என்பதை சின்ன விஷயத்தில் ஊரு உலகத்திற்கு காட்டிவிட்டான்
அதெல்லாம் இருக்கட்டும ஜாகீரு நீ இப்ப இந்த உலகத்துக்கு என்னதான் சொல்ல வர்ற?உனக்கு நல்லா தெரிஞ்ச மொழியில கருத்தை போடு.
பாகிஸ்தான் மொழியில் அவருடைய தரத்தை நிரூபிக்கிறார் வாழ்த்துகள்.
பாகிஸ்தான் மொழியில் அவருடைய தரத்தை நிரூபிக்கிறார்
பொது குழுவில் மறுபடியும் செருப்படி காத்திருக்கு திமுக கைகூலிக்கு....
இந்த துளியூண்டு பிரச்சினைக்காக மக்கள் வரிப்பணம் எத்தனை செலவிடப்படுகிறது.
தீர்ப்பை படிக்காமல் திமுக அடிமைகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் .இது முழுக்க முழுக்க பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு . 1 -பொதுக்குழு முக்கியம் என்ற கருத்து மையமாகிறது 2 -பொதுக்குழு கடிதம் வாங்கினால் போதும் .அப்போது எடப்பாடி வேட்பாளர் தான் வெகு சாதாரணமாக வெற்றி பெறுவார் . 3 -இரட்டை இல்லை முடக்க பட வில்லை என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்து உள்ளது . 4 -இது இடை தேர்தலுக்கு மட்டும்தான் பொருந்தும் 5 -பொதுக்குழு முக்கியம் என்று உச்சநீதி மன்றம் கருதுவதால் கடைசி தீர்ப்பும் எடப்பாடிக்குதான் சாதகமாக வரும்
முக்கியமா ஜூலை மாதத்து பொதுக்குழு பொதுக்குழுவே இல்லை என்று ஆகிவிட்டதா? சரியாக ஒன்பது மணிக்கு தீர்ப்பு, ஒன்பதேகால் மணிக்கு பொதுக்குழு..அது செல்லாது செல்லாது. அது மட்டும் இன்றி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டார். இப்போது என்ன பதவியில் பழனி இருக்கிறார் என்பதை கற்று அறிந்தவர்கள் கூறுவார்களா?
தீர்ப்பு இந்த இடை தேர்தலுக்கு மட்டும் தான் .அதுவும் தமிழ் மகன் ஹுசைன் தான் அவை தலைவர் .தீர்ப்பு படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள் ஜூலை மாதத்து பொதுக்குழு பொதுக்குழுவே இல்லை...என்று எங்கும் குறிப்பிடவில்லை
பொதுக்குழு உறுப்பினர்களை கட்சி தொண்டர்கள் வாக்கு சீட்டு அல்லது குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். (தொண்டர்களை கொஞ்சம் சம்பாதிக்க விட வேண்டும்?) பின் பொதுக்குழு வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் ஏற்கும்.? இரட்டை இலை கிடைக்கும். ஆனால், நடக்குமா? இருவரும் மக்கள் உணர்வை அறியாமல் (இலவசமாக) முதல்வர் பதவி பெற்றவர்கள்.
பழனி ஜூலை மாதத்து பொதுக்குழுவுக்கே எத்தனை ஆயிரம் லட்டுகளை வாரி இறைத்தார்? இப்போது ஒரே ஒரு இடைத்தேர்தலுக்காக இன்னும் எத்தனை ஆயிரம் லட்டுக்களை இறைப்பார்? இதெல்லாம் எங்கிருந்து வருது?
வழா வழா கொழா கொழா . ஏதோ ஒரு முடிவோடதான் இருக்காங்க
முடிவைக்கேட்டால் ஆரம்பித்து வைக்கிறார்கள். மறுபடியும் முதல்லே இருந்தா? இரண்டுபேரும் ஒன்றாக பொதுக்குழுவை கூட்ட முடியாததால் தான் வழக்கே ஆரம்பிக்கப்பட்டது. இருவரும் இணையமுடியாது என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னரும் மறுபடியும் இணைந்து கூட்டுங்கள் என்பது இணைய வைப்பதற்கான முயச்சியாகவே தோன்றுகிறது,
ஜெ . உயிரோடு இருந்த பொது இருந்த பொதுக்குழு மட்டுமே செல்லுபடியாகும் ஒன்று என்று கூறிவிட்டால் , இந்த அக்கப்போர் முடிவுக்கு வந்து விடும்....ஜெ . மறைவுக்கு பின் அமைக்கப்பட்ட பொதுக்குழுக்கள் எல்லாமே காசு இறைத்து கூட்டப்பட்ட சந்தர்ப்பவாத அல்லக்கை கும்பல்கள் மட்டுமே ...
பிஜேபி தன வேலையை காட்டி விட்டது.
திருப்பூரில் வந்த பாருங்க .ரோடின் அழகை .இதுதான் மக்கள் ஆட்சியை அனுபவிக்கிறார்கள் என்று /போங்கடா ஸ்மார்ட் சிட்டி அழகை பாருங்க ரோட்டில் நடக்கவே முடியலை ,சே
கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல பாலா கோவிந்தா.
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்கள். மேலிடம் அப்படியே வேற லெவல் கணக்கு போட்டிருக்குது ஹி ஹி .. பழனிக்கு அரோகரா..
அதாவது பாம்பும் சாகக்கூடாது, தடியும் முறியக்கூடாது என்பது போலுள்ளது இந்த தீர்ப்பு......அதற்கு பதில் பன்னீர் பழனி இருவரும் தங்களோட காதுகளை மாற்றி பிடித்து உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என கூறி தோப்புக்கரணம் போட்டு சமாதானமாகிவிடலாம்....
இப்போ யாருக்கெல்லாம் முட்டு சந்து...லிஸ்டு பெரிசாகிட்டே போகுது...ஆவ்..அவ்..
பழனி : ஒன்றா ரெண்டா ஆப்புகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா சொல்லு ஒன்றா ரெண்டா ஆப்புகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இதுவே நீளுமா தேர்தல் நீளுமா... என் கனவில் பன்னீர் : ஆ ஹா… நான் கண்ட ஆ ஹா… நாளிது தான் கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா பேசிடலாம் கலாபக்காதலா..
அறிவாலய அடிமைகள் கடைசிவரை இப்படி ஆண்டிப்பண்டாரம் மாதிரிபாடிக்கிட்டே திரிய வேண்டியதுதான்.
உச்சநீதிமன்றம் போகலாம் என்று பழனிக்கு ஆலோசனை கொடுத்த புண்ணியவானை பழனி வலை வீசி தேடிக்கொண்டிருப்பதாக அரசியல் வட்டார பட்சிகள் தகவல்.
பழனிக்கு பஞ்சாமிர்தம் கொடுப்பது என்பது இது தான்.
உபிக்களுக்கு அதுவும் இல்லை!😆
வெண்ணிலா கபடிக்குழு பரோட்டா சூரி தீர்ப்பு எழுதினா மாதிரி இருக்கு. "எல்லாத்தையும் அழிங்க, மொதல்லே இருந்து ஆரம்பிக்கலாம்" ன்னு பரோட்டா திங்க ஆரம்பிச்ச கதை தான்.