ADVERTISEMENT
திருப்புத்தூர் : தைப்பூசத்தையொட்டி பாரம்பரியப்படி செட்டிநாடு நகரத்தார்கள் காவடி எடுத்து பழநிக்கு செல்கின்றனர். நேற்று குன்றக்குடியில் இருந்து காவடி யாத்திரை தொடங்கியது.
தைப்பூச விழாவையொட்டி பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர். செட்டிநாடு நகரத்தார் பாரம்பரியமாக நேற்று முன்தினம் இரவு காவடிகளுடன் குன்றக்குடி வந்தனர். அங்கு ரத்தினவேல், காவடிகளுக்கு பூஜை செய்து நேற்று காலை 8:50 மணிக்கு காவடி ஏந்தி பாதயாத்திரை சென்றனர்.
பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி கோயிலில் சாமியாடிகளுக்கு பிரசாதம் வழங்கினர். ஊர்குளத்தான்பட்டி, நெடுமரம், ஜெயமங்கலம், சில்லாம்பட்டி, கண்டவராயன்பட்டி வழியாக 400 ஆண்டுகள் பாரம்பரியமாக செல்லும் வயல், கண்மாய் கரை, மேய்ச்சல் தரை வழியாக பழநி நோக்கி சென்றனர். பாதயாத்திரையில் 291 நகரத்தார்கள் காவடி ஏந்திசென்றனர். பிப்., 3 ல் காவடி பழநி செல்லும். பிப்., 6 ல் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும்.
சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் நாட்டார்கள் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து ரத்தினவேல் எடுத்து அனைத்து நாட்டார்கள் காவடி ஜன. 27 ல் புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 151 காவடிகளை எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு சென்றனர். நேற்று மருதிபட்டியில் இக்காவடிகளுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு ரத்தினவேல் மற்றும் காவடிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
தைப்பூச விழாவையொட்டி பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர். செட்டிநாடு நகரத்தார் பாரம்பரியமாக நேற்று முன்தினம் இரவு காவடிகளுடன் குன்றக்குடி வந்தனர். அங்கு ரத்தினவேல், காவடிகளுக்கு பூஜை செய்து நேற்று காலை 8:50 மணிக்கு காவடி ஏந்தி பாதயாத்திரை சென்றனர்.
பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி கோயிலில் சாமியாடிகளுக்கு பிரசாதம் வழங்கினர். ஊர்குளத்தான்பட்டி, நெடுமரம், ஜெயமங்கலம், சில்லாம்பட்டி, கண்டவராயன்பட்டி வழியாக 400 ஆண்டுகள் பாரம்பரியமாக செல்லும் வயல், கண்மாய் கரை, மேய்ச்சல் தரை வழியாக பழநி நோக்கி சென்றனர். பாதயாத்திரையில் 291 நகரத்தார்கள் காவடி ஏந்திசென்றனர். பிப்., 3 ல் காவடி பழநி செல்லும். பிப்., 6 ல் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கும்.
சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் நாட்டார்கள் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து ரத்தினவேல் எடுத்து அனைத்து நாட்டார்கள் காவடி ஜன. 27 ல் புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 151 காவடிகளை எடுத்து பாதயாத்திரையாக பழநிக்கு சென்றனர். நேற்று மருதிபட்டியில் இக்காவடிகளுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு ரத்தினவேல் மற்றும் காவடிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!