Load Image
Advertisement

உலகில் கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் தான் மிகப்பெரிய ராஜதந்திரிகள்: ஜெய்சங்கர்

Tamil News
ADVERTISEMENT
மும்பை: கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் தான் உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆங்கில புத்தகமான ''The India way: Stragegies for an Uncertain world'' என்ற புத்தகத்தை மராத்தி மொழியில், மொழிபெயர்க்கப்பட்டு 'பாரத் மார்க்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகளாக கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் திகழ்ந்தனர். ஹனுமனை எடுத்து கொண்டால், தனது ராஜதந்திரத்தை தாண்டி, தனது பணியை தாண்டி, கடவுள் சீதையை பார்த்ததுடன், இலங்கைக்கும் தீவைத்தார் எனக்கூறினார்.
Latest Tamil News
மேலும் அவர், கடவுள் கிருஷ்ணர் சிசுபாலனை பல முறை மன்னித்தார். சிசுபாலனின் 100 தவறுகளை பொறுத்து கொள்வதாக கிருஷ்ணர் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை தாண்டிய பிறகு, சசிபாலனை கடவுள் தண்டித்தார். இது, சிறந்த முடிவெடுப்பவரின் மிக முக்கியமான குணங்கள் ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என ஜெய்சங்கர் கூறினார்.
Latest Tamil News
மேலும், அணுசக்தி வைத்திருக்கும் பாகிஸ்தான் நம்மை தாக்குமா என்ற கேள்விக்கு, ஜெய்சங்கர் கூறுகையில், பாண்டவர்களால் உறவினர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதேபோல், நம்மால் அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியாது. இது உண்மை. நல்ல எண்ணம் மேலோங்கும் என இயற்கையாகவே நாம் நம்புகிறோம் என பதிலளித்தார்.
Latest Tamil News

ஜெய்சங்கர் மேலும் கூறும் போது, விதிகள் அடிப்படையிலான உத்தரவை துரியோதனனும், கர்ணனும் மதித்தது கிடையாது. இருவரின் நட்பானது, அவர்களுக்கே, குடும்பத்தினருக்கோ எந்த பலனையும் அளிக்கவில்லை. சமூகத்தில் எந்த நேர்மறையான தாக்கத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, அது அவர்களின் உயிரை வாங்கியது. பெரிய அழிவையும் மீறமுடியாத துயரத்தையும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிதாபகரமான துன்பத்தையும் ஏற்படுத்தியது என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து சீனா மற்றும் பாகிஸ்தான் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.

ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், வெளியுறவுத்துறை செயலாளராக இருப்பதே எனது லட்சியத்தின் எல்லை. அமைச்சராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. பிரதமர் மோடியை தவிர எந்த பிரதமரும் என்னை அமைச்சராக்கியிருப்பார் என்று உறுதியாக தெரியவில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


வாசகர் கருத்து (19)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    பிரதமர் இவரை தேர்வு செய்தது மிக சரியான செயல் .இருவருக்கும் பாராட்டுகள் ..நமது இக்கட்டான சூழ்நிலையில் இவர் வெளியுறவு மந்திரியாக உள்ளார் என்பது தான் விஷயம் .சீனா வுடன் உறவுகள் இவரால் தான் ஓரளவு சிறப்பாக இருக்கிறது .

  • amuthan - kanyakumari,இந்தியா

    சூழ்ச்சியின் மறு பெயர் தான் ராஜ தந்திரம்

  • Dhandapani - Madurai,இந்தியா

    ஜெய்சங்கர் சார் நீங்கள் அடிப்பது ஜால்றா என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும், இருப்பினும் உங்களைப்போன்ற படித்த திறைமையான அறிவாளிகை அடையாளம் கண்டு அவர்களை பொறுப்பில் அமரவைத்த மிக பெரிய '21'ம் நூற்றாண்டின் ராஜதந்திரி மோடிஜி தான் சார்

  • ஆதவப் பிரியன் - Singapore,சிங்கப்பூர்

    இந்தியர் எப்போதும் கற்பனை உலகில் வாழ்பவர்கள் என்பதை நிரூபிக்கிறார்

  • சீனி - Bangalore,இந்தியா

    கிருஷ்ணர் எப்படி ஒரு அர்ஜுனனை போருக்கு தேர்ந்தெடுத்து தயார் படுத்தினாரோ, அப்படி மோதி ஒவ்வொரு திறமைசாலிகளையும் தேர்ந்தெடுத்து தயார்படுத்துகிறார். நிதித்துறைக்கு நிர்மலா, வெளியுறவுக்கு ஜெய்சங்கர், அடுத்த ராணுவமந்திரி அண்ணாமலை, உள்துறை மந்திரி யோகி ஆதித்யநாத்..... மோதி ஒரு சர்வதேச அரசியல் சாணக்கியன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்