Load Image
Advertisement

சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் பாதிப்பு

Congestion of sewage in tunnels; People affected    சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேக்கம்; மக்கள் பாதிப்பு
ADVERTISEMENT

கழிவுநீர் தேக்கம்



கொடிங்கியம், ஊராட்சி வல்லக்குண்டாபுரம் பிரிவு, காந்திநகர் பகுதியில் கடந்த ஆண்டு கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில், கழிவுநீர் செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது. இதனால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் சரிசெய்ய வேண்டும்.

- பொதுமக்கள், கொடிங்கியம்.

சுரங்கப்பாதையில் கழிவுநீர்



உடுமலை அருகே, ராகல்பாவி சுரங்கப்பாதையில், பக்கத்து தோட்டங்களிலிருந்து கழிவுநீர் வந்து சேகரமாகி தேங்கி நிற்கிறது. இதில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இத்தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

- கார்த்திக், ராகல்பாவி.

போலீசார் கவனத்துக்கு



உடுமலை, கொழுமம் ரோடு பிரிவு அருகில், வாகனம் திரும்பும் இடத்தில் பேனர் வைத்துள்ளதால், வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சதீஸ்குமார், உடுமலை.

வாகனங்கள் நிறுத்தம்



உடுமலை, தாராபுரம் ரோட்டிலிருந்து பிரியும் 100 அடி ரோட்டில், வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால், அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகவேல், உடுமலை.

பிளாஸ்டிக் கழிவால் பாதிப்பு



உடுமலை, அனுஷம் தியேட்டர் ரோட்டில், மதுக்கடை முன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவற்றை நகராட்சி சுகாதாரத்துறையினர் அகற்ற வேண்டும்.

- கண்ணன், உடுமலை.

ரோடு மோசம்



உடுமலை, தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதையில் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பாதையை சீரமைக்க வேண்டும்.

- கந்தசாமி, உடுமலை.

நிழற்கூரை வேண்டும்



உடுமலை, யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இதனால், பயணியர் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏற வேண்டியதுள்ளது. எனவே, நகராட்சியினர் அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.

குப்பை மலை



உடுமலை, கொழுமம் ரோடு, அமுதராணி பஸ் ஸ்டாப் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு குப்பை கொட்டுவதை ஊராட்சியினர் தடுக்க வேண்டும்.

- சிவராஜ், உடுமலை.

செயல்படாத சிக்னல்



உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படுவதில்லை. இதனால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அந்த சிக்னல்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், உடுமலை.

விபத்து அபாயம்



உடுமலை, பழநி ரோட்டில், ஐஸ்வர்யா நகர் சந்திப்பில், வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால், அந்த ரோட்டை மக்களால் கடக்க முடியவில்லை. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வேகமாக வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சக்தி, உடுமலை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement