ADVERTISEMENT
சென்னை : அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும், உண்டியல் திறப்பு நிகழ்வை, பக்தர்கள் கண்டறியும் வகையில், நேரலையாக ஒளிபரப்பு செய்ய, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு உள்ளார்.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 48 முதுநிலை கோவில்களின் உண்டியல் திறப்பு, 'எல்காட்' நிறுவனம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து முதுநிலை கோவில்களில் நடக்கும் உண்டியல் திறப்பு நிகழ்வை, 'எல்காட்' நிறுவனம் வாயிலாக ஒளிபரப்பாமல், அந்தந்த கோவில் நிர்வாகத்தின் வாயிலாக, நேரடியாக கோவில், 'யு டியூப்' வாயிலாக ஒளிபரப்ப வேண்டும்.
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வலைதள முகவரியை, பொதுமக்கள் அறியும் வகையில் கோவில் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கான வசதிகளை, அந்தந்த மண்டல இணைக் கமிஷனர் மேற்கொண்டு, நேரடி ஒளிபரப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 48 முதுநிலை கோவில்களின் உண்டியல் திறப்பு, 'எல்காட்' நிறுவனம் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
முதுநிலை கோவில்களின் முக்கிய நிகழ்வுகளை, 'யு- டியூப்' வாயிலாக, கோவில் சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் வலைதள முகவரியை, பொதுமக்கள் அறியும் வகையில் கோவில் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கான வசதிகளை, அந்தந்த மண்டல இணைக் கமிஷனர் மேற்கொண்டு, நேரடி ஒளிபரப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கோவில் உண்டியல் மட்டும் இல்லை...சர்ச் மற்றும் மசூதியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும்