Load Image
Advertisement

சாலை, குடிநீர் பணிகள் தரமாக நடக்கிறதா? மக்கள் கண்காணிக்க கலெக்டர் அட்வைஸ்

Tamil News
ADVERTISEMENT


நெல்லிக்குப்பம்-மருதாடு ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பாலசுப்ரமணியம், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், டி.ஆர்.ஓ., பூவராகவன், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, ஊராட்சி உதவி இயக்குனர் ஷபனா அஞ்சும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், சக்தி, ஊராட்சி தலைவர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு, வாக்காளர் உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். கிராம சபையில் கலெக்டர் பாலசுப்ரமணியம் பேசியதாவது:

அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் விரைவில் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும். ஊராட்சியில் நடக்கும் சாலை, குடிநீர் பணிகள் முறையாக நடக்கிறதா, தரமாக உள்ளதா என மக்கள் கண்காணிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு அமைப்பை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்.

திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தக் கூடாது. அனைவருக்கும் வீடுகளில் கழிவறை கட்ட நிதி வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது நம்மிடம் தான் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து ஊரை துாய்மையாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது சட்டபடி குற்றமாகும். அவர்களை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

கிராம சபை கூட்டம் நடந்த இடத்தில் மரக்கன்றுகளை கலெக்டர் நட்டார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் குறைகளை கேட்டு தீர்வு வழங்கினார்.


வாசகர் கருத்து (1)

  • சண்முகம் -

    ஆமா, கண்காணிச்சு என்ன நடக்கப்போகுது? உங்க கங்காணிங்க என்ன பண்ணுரானுவ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement