Load Image
Advertisement

திரிணமுல் காங்., பிரமுகர் கைது

ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்தவர் சாகேத் கோகலே. இவர், திரிணமுல் காங்., கட்சியின் செய்தி தொடர்பாளராக உள்ளார். 'நமது ஜனநாயகம்' என்ற பெயரில், பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, தன் சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 1,700 பேரிடம் 70 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியதாக, இவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில், கடந்த மாதம் 30ம் தேதி சாகேத் கோகலே கைது செய்யப்பட்டார். ஆமதாபாத் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்தது.

இவர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், நேற்று அமலாக்கத்துறையினர் பணப்பரிமாற்ற மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில், கோகலே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை, அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் 31 வரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement