வாலிபர் சாவு போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி-நெஞ்செரிச்சல், மயக்கம் ஏற்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் தமிழரசன்,32; இவருக்கு கடந்த 23ம் தேதி இரவு 11 மணியளவில் திடீரென நெஞ்சு எரிச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடன் அவரது குடும்பத்தினர் தமிழரசனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி தமிழரசன் இறந்தார்.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!