பண தகராறில் தாக்கிய மூன்றுபேர் மீது வழக்கு
விழுப்புரம்-பண தகராறில் இரண்டுபேரை தாக்கிய மூன்றுபேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த ஆரியூரை சேர்ந்தவர் சின்னமணி, 32; இவர், கருங்காலிப்பட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம், செங்கல் சூளைக்கு வேலைக்கு வருவதாக 20 ஆயிரம் ரூபாய் முன் பணம் வாங்கியுள்ளார். இதையடுத்து, வேலைக்கும் செல்லாமல், பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி கருங்காலிப்பட்டு அம்பேத்கர் சிலை அருகே சென்ற சின்னமணி மற்றும் அவரது உறவினர் ஜெகதீசன், 40; என்பவரை, பாலமுருகன் மற்றும் இரண்டு நபர்கள் வழிமறித்து பணத்தை கேட்டு திட்டி தாக்கி தாக்கியுள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில், பாலமுருகன் உள்ளிட்ட மூன்றுபேர் மீது காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!