முதியவர் சடலம்
விழுப்புரம்-அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் ரயில் நிலையம் எதிரில் உள்ள தனியார் திரையரங்கம் செல்லும் வழியில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!