ரயில் மோதி அடையாளம் தெரியாதவர் பலி
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் உடல் நசுங்கி பலியனார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரும்பட்டு - கீரிமேடு ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி 40; வயது மதிக்கதக்க ஆண் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் விருத்தாச்சலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!