Load Image
Advertisement

துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது

3 people with guns arrested    துப்பாக்கி  வைத்திருந்த 3 பேர் கைது
ADVERTISEMENT
உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை கொமரலிங்கம், சாமராயபட்டி - பெருமாள் புதுார் பிரிவு அருகே, போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மூவரை நிறுத்திய போது, அவர்கள்கையில் வைத்திருந்த பொருளை, இருட்டில் துாக்கி வீசினர். போலீசார் தேடி பார்த்தபோது, நாட்டுத்துப்பாக்கி என தெரிய வந்தது.

விசாரணையில், கோவையில் ஒரு மாதத்திற்கு முன், துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

சாமராயபட்டியைச் சேர்ந்த துர்க்கைவேல், 39, சிவசக்தி, 20, மாசாணமுத்து, 23 ஆகியோரை போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கி, தோட்டா பறிமுதல் செய்தனர். துப்பாக்கி விற்பனை செய்த, கோவையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement