காட்டு யானை தாக்கி வனத்துறை வாகனம் சேதம்
கூடலுார் : கூடலுார் தேவர்சோலை அருகே, கொட்டாய்மட்டம் பகுதியில் காட்டு யானை முகாமிட்டு இருந்தது.
மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவுபடி, வனச்சர்கள் ராதாகிருஷ்ணன் தலைமையில் வனவர்கள் செல்லதுரை, சுரேஷ் உட்பட 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகல், 1:30 மணிக்கு, வனத்துறை வாகனம் மூலம் அதனை விரட்டி சென்றனர். வாகனத்தை வேட்டை தடுப்பு காவலர் ராஜ்குமார் ஓட்டி சென்றார். திடீரென யானை திரும்பி, வனத்துறை வாகனத்தின் முன் பகுதியை தாக்கி சேதப்படுத்தியது.
வன ஊழியர்கள் சப்த்தமிட்டு யானையை விரட்டினர். இதனால், ஐந்து பேர் உயிர் தப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!