ADVERTISEMENT
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று தரிசிக்கின்றனர்.
மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவியும் போது, போதிய அளவில் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக முக்கிய விழாக்களின் போது பக்தர்கள் தேர்வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் போது சில பக்தர்கள் மயங்கி விழுகின்றனர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்க தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பக்தர்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், கோவில் நிதியில் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு நிழற்குடையும், 12 அடி நீளம், 3 அடி அகலம் அளவிற்கு மொத்தம், 25 நிழற்குடைகள், 300 அடி துாரத்திற்கு அமைத்துக் கொள்ளலாம்.
இந்த நிழற்குடை தேர்வீதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் மழை, வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, நிழற்குடைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஒரிரு நாளில் மலைக்கோவில் நிழற்குடை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவியும் போது, போதிய அளவில் நிழற்குடை இல்லாததால் வெயில் மற்றும் மழையில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசிக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக முக்கிய விழாக்களின் போது பக்தர்கள் தேர்வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் வரிசையில் காத்திருக்கும் போது சில பக்தர்கள் மயங்கி விழுகின்றனர்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற்குடைகள் அமைக்க தீர்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பக்தர்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், கோவில் நிதியில் இருந்து, 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு நிழற்குடையும், 12 அடி நீளம், 3 அடி அகலம் அளவிற்கு மொத்தம், 25 நிழற்குடைகள், 300 அடி துாரத்திற்கு அமைத்துக் கொள்ளலாம்.
இந்த நிழற்குடை தேர்வீதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் மழை, வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு வசதியாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது, நிழற்குடைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. ஒரிரு நாளில் மலைக்கோவில் நிழற்குடை அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!