Load Image
Advertisement

மொபைல் போன் டவர் அமைக்க வல்லம் கிராம மக்கள் எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், வல்லம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, தனியார் மொபைல் போன் டவர், ஏற்கனவே ஒருவரது வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதே வீட்டில், இரண்டாவதாக மற்றொரு டவர் அமைக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இதனால், அதிருப்தி அடைந்த வல்லம் கிராம மக்கள், மொபைல் போன் டவரால், இந்த பகுதியில், ஏற்கனவே கதிர் வீச்சு உள்ளது.

இந்நிலையில், இரண்டாவதாக டவர் அமைத்தால், மேலும் கதிர் வீச்சு அதிகரிக்கும். எனவே, வல்லத்தில் மொபைல் போன் டவர் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, டவர் அமைக்கும் ஊழியர்களை முற்றுகையிட்டு, கிராம மக்கள் நேற்று முன்தினம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement