வெடி விபத்தில் ஊழியர் பலி
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே, காட்டரம்பாக்கம் பகுதியில், வாகனங்களின் புகைபோக்கிகளுக்கு ரசாயன கலவை பூசும், 'ஆர்பிட் கோடிங்' என்ற பெயரிலான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு, கடந்த 20ம் தேதி இரவு, அதிக அழுத்தம் காரணமாக, ரசாயன கலவையை பீய்ச்சி அடிக்கும் 'பாய்லர்' இயந்திரம், பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி, தீப்பற்றியது.
இதில், காட்டரம்பாக்கத்தைச் சேர்ந்த மதன்குமார், 26, திருவள்ளூரைச் சேர்ந்த சேனாதிபதி, 36, உட்பட ஐந்து ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் ஐந்து பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சேனாதிபதி சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார்.இதுகுறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!