ADVERTISEMENT
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே தனது மகள்கள் பிறவியிலேயே மாற்றுத்திறனாளிகளாக பிறந்ததால் மனம் உடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பேத்திகளை அவர்களது பாட்டி கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பனங்கரை மேட்டு தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன் மனைவி மாரியம்மாள்.73. கணவர் இறந்த நிலையில் தனது ஒரே மகனான பவுன்ராஜ்க்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் தனது உறவினர் பெண்ணான ஜெயக்கொடியை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பவுன்ராஜ், ஜெயக்கொடி தம்பதியினருக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த 2 பெண் குழந்தைகளும் பிறவியிலேயே கால்கள் செயல்படாமல் மாற்றுத்திறனாளிகளாகவே பிறந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனமடைந்த பவுன்ராஜ், ஜெயக்கொடி தம்பதியினர் தங்களது 2 மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளையும் நிற்கதியாக விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதனை அடுத்து கால் முடியாத 2 மாற்றுத் திறனாளி சகோதரிகளையும் உறவினர்கள் காப்பகத்தில் சேர்க்க ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை பிரிய மனம் இல்லாத மாரியம்மாள் தனது இரண்டு பேத்திகளையும் சிறு வயது முதல் தன்னுடனேயே வைத்து வளர்த்து வருகிறார்.
ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானம் என அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது முதல் பேசியான கற்பக ஜோதியை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்ததுடன், கம்ப்யூட்டர் கல்வியும் கொடுத்துள்ளார். இரண்டாவது பேத்தி தேன்மொழியை 6ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
தற்போது கற்பக ஜோதிக்கு.32. வயதும், தேன்மொழிக்கு.28. வயதும் நிறைவடைந்துள்ளது. தற்போது 74 வயதை எட்டியுள்ள மாரியம்மாளுக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. தனது பேத்திகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைவில் திருமண ஏற்பாடு செய்தால் ஊனம் தடையாகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது நிலையை அறிந்த நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவின் பேரில் கற்பக ஜோதிக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனமும், குத்தாலம் யூனியன் அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் நீடித்த பாடு இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பணிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டு, கொரோனாவை காரணம் காட்டி கற்பக ஜோதி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆடு வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் மாரியம்மாளுக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகை, துறவி மாற்றுத்திறனாளிகளான கற்பக ஜோதி தேன்மொழிக்கு கிடைக்கும் உதவித்தொகையை கொண்டே தங்களது உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். மாதத்தில் பாதி நாட்களுக்கு இவர்கள் உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவி செய்து வருகின்றனர். தனது முதுமையின் காரணமாக பழையபடி வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை என கூறும் மாரியம்மாள் தனக்கு பிறகு இந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளையும் யார் காப்பாற்றுவார்கள் என்று வேதனை தெரிவிப்பதுடன், மத்திய மாநில அரசுகள் இவர்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு அளித்தால் அவர்களது வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறினார்.
மாற்றுத்திறனாளியானாலும் சற்றும் மனம் தளராத கற்பகஜோதி மத்திய, மாநில அரசுகள் தனது நிலைக்கு ஏற்ப வேலை வழங்கினால் தானும் தனது சகோதரியும் நல்லபடியாக வாழ முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே இந்த மாற்றுத்திறனாளி சகோதரிகளின் வாழ்வு வளம் பெற அரசு வேலை வழங்குவதுடன், கை தொழிலை கற்றுக் கொடுத்து சுயமாக தொழில் செய்து சம்பாதித்திட மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் இவர்கள் வாழ்விலும் நிச்சயம் ஒளி வீசும் என்பதில் ஐயமில்லை.
மாரியம்மாள்-குத்தாலம்.
மொபைல் நம்பர்:- 9751969124
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பனங்கரை மேட்டு தெருவை சேர்ந்தவர் பேச்சியப்பன் மனைவி மாரியம்மாள்.73. கணவர் இறந்த நிலையில் தனது ஒரே மகனான பவுன்ராஜ்க்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மாள் தனது உறவினர் பெண்ணான ஜெயக்கொடியை திருமணம் செய்து வைத்துள்ளார்.
பவுன்ராஜ், ஜெயக்கொடி தம்பதியினருக்கு அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த 2 பெண் குழந்தைகளும் பிறவியிலேயே கால்கள் செயல்படாமல் மாற்றுத்திறனாளிகளாகவே பிறந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் மனமடைந்த பவுன்ராஜ், ஜெயக்கொடி தம்பதியினர் தங்களது 2 மாற்றுத்திறனாளி பெண் குழந்தைகளையும் நிற்கதியாக விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதனை அடுத்து கால் முடியாத 2 மாற்றுத் திறனாளி சகோதரிகளையும் உறவினர்கள் காப்பகத்தில் சேர்க்க ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களை பிரிய மனம் இல்லாத மாரியம்மாள் தனது இரண்டு பேத்திகளையும் சிறு வயது முதல் தன்னுடனேயே வைத்து வளர்த்து வருகிறார்.
ஆடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானம் என அனைத்தையும் ஒன்று சேர்த்து தனது முதல் பேசியான கற்பக ஜோதியை 12 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்ததுடன், கம்ப்யூட்டர் கல்வியும் கொடுத்துள்ளார். இரண்டாவது பேத்தி தேன்மொழியை 6ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
தற்போது கற்பக ஜோதிக்கு.32. வயதும், தேன்மொழிக்கு.28. வயதும் நிறைவடைந்துள்ளது. தற்போது 74 வயதை எட்டியுள்ள மாரியம்மாளுக்கு வயது முதிர்வு மற்றும் உடல்நிலை காரணமாக கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. தனது பேத்திகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைவில் திருமண ஏற்பாடு செய்தால் ஊனம் தடையாகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது நிலையை அறிந்த நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவின் பேரில் கற்பக ஜோதிக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனமும், குத்தாலம் யூனியன் அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுக்கும் பணியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் நீடித்த பாடு இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தப் பணிக்கு வேறொருவர் நியமிக்கப்பட்டு, கொரோனாவை காரணம் காட்டி கற்பக ஜோதி வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆடு வளர்ப்பில் கிடைக்கும் சொற்ப வருமானம் மற்றும் மாரியம்மாளுக்கு கிடைக்கும் முதியோர் உதவித்தொகை, துறவி மாற்றுத்திறனாளிகளான கற்பக ஜோதி தேன்மொழிக்கு கிடைக்கும் உதவித்தொகையை கொண்டே தங்களது உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். மாதத்தில் பாதி நாட்களுக்கு இவர்கள் உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர்.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவி செய்து வருகின்றனர். தனது முதுமையின் காரணமாக பழையபடி வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட முடியவில்லை என கூறும் மாரியம்மாள் தனக்கு பிறகு இந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளையும் யார் காப்பாற்றுவார்கள் என்று வேதனை தெரிவிப்பதுடன், மத்திய மாநில அரசுகள் இவர்களுக்கு ஏதேனும் வேலை வாய்ப்பு அளித்தால் அவர்களது வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என கூறினார்.
மாற்றுத்திறனாளியானாலும் சற்றும் மனம் தளராத கற்பகஜோதி மத்திய, மாநில அரசுகள் தனது நிலைக்கு ஏற்ப வேலை வழங்கினால் தானும் தனது சகோதரியும் நல்லபடியாக வாழ முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். எனவே இந்த மாற்றுத்திறனாளி சகோதரிகளின் வாழ்வு வளம் பெற அரசு வேலை வழங்குவதுடன், கை தொழிலை கற்றுக் கொடுத்து சுயமாக தொழில் செய்து சம்பாதித்திட மத்திய, மாநில அரசுகள் உதவி செய்தால் இவர்கள் வாழ்விலும் நிச்சயம் ஒளி வீசும் என்பதில் ஐயமில்லை.
மாரியம்மாள்-குத்தாலம்.
மொபைல் நம்பர்:- 9751969124
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த விடியலார் ஆட்சியில் இதை கவனிக்க நேரமில்லை