கோடைகால சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
கரூர், ஜன. 25-
கோடைகாலம் நெருங்குவதை முன்னிட்டு, கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் இருந்து, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சேலத்துக்கு ரயில்வே வழித்தடம் உள்ளது. இருப்பினும் கரூர் வழியாக போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இயக்கப்படும் ரயில்கள்தான் செல்கின்றன.
கரூர் மாவட்டத்தில், உள்ள தொழில் நிறுவனங்களில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
அதேபோல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெங்களூரு, திருப்பூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், பஸ்களை நம்பியே உள்ளனர்.
தற்போது, பஸ் கட்டணத்தை விட, ரயிலில் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு, வரும் மார்ச் மாத இறுதியில், கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் இடம் இல்லாமல், நீண்ட துார பயணம் செய்வோர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கோடை விடுமுறை நெருங்க உள்ள நிலையில், கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, கரூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோடைகாலம் நெருங்குவதை முன்னிட்டு, கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில் இருந்து, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு மற்றும் சேலத்துக்கு ரயில்வே வழித்தடம் உள்ளது. இருப்பினும் கரூர் வழியாக போதிய அளவில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை. பல ஆண்டுகளாக இயக்கப்படும் ரயில்கள்தான் செல்கின்றன.
கரூர் மாவட்டத்தில், உள்ள தொழில் நிறுவனங்களில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
அதேபோல், கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் பெங்களூரு, திருப்பூர், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் படிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும், பஸ்களை நம்பியே உள்ளனர்.
தற்போது, பஸ் கட்டணத்தை விட, ரயிலில் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு, வரும் மார்ச் மாத இறுதியில், கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் இடம் இல்லாமல், நீண்ட துார பயணம் செய்வோர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கோடை விடுமுறை நெருங்க உள்ள நிலையில், கரூர் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என, கரூர் மாவட்ட பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!