நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜன. 25-
சேலம் மாவட்ட நில அளவை அலுவலர்கள் யூனியன் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சங்கர், மாநில துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், நில அளவையர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காண்பித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சேலம் மாவட்ட நில அளவை அலுவலர்கள் யூனியன் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சங்கர், மாநில துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், நில அளவையர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காண்பித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!