ADVERTISEMENT
மதுரை: 'தற்போது திராவிட மாடல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மாடல் என்பதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன; ஆங்கிலத்திற்கு பதில் தமிழை பயன்படுத்தலாமே' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
வழக்கறிஞர் தீரன் திருமுகன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல், ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.
கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், அவரவர் தாய் மொழியே முதன்மையாக இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் அரசு அலுவலக பெயர் பலகைகளில் ஆங்கிலம் பெரிய எழுத்துக்களாகவும், தமிழ் சிறிய எழுத்துக்களாகவும் இடம் பெறுகிறது.
தமிழக அரசின், 1987 அரசாணைப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், நிறுவனங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும். இதை முறையாக பின்பற்றுவதில்லை.
அரசு அலுவலகங்கள், வணிகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளை தமிழுக்கு அடுத்ததாக கீழ் பகுதியில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
2017ல் நீதிபதிகள் அமர்வு, 'அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் நான்கு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றவில்லை. தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு, 'அரசாணைப்படி அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை' என, வாதிட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். சட்டக் கல்லுாரி உட்பட பல கல்லுாரிகளில் தமிழில் புத்தகங்கள் வழங்கலாம்.
தற்போது, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மாடல் என்பதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன; அதில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழை பயன்படுத்தலாமே.
அரசாணையை பின்பற்றி கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம் பெறுகிறதா; இல்லையெனில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொழிலாளர் நலத்துறை செயலர் பிப்., 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
வழக்கறிஞர் தீரன் திருமுகன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை பயன்படுத்தாமல், ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர்.
கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், அவரவர் தாய் மொழியே முதன்மையாக இடம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் அரசு அலுவலக பெயர் பலகைகளில் ஆங்கிலம் பெரிய எழுத்துக்களாகவும், தமிழ் சிறிய எழுத்துக்களாகவும் இடம் பெறுகிறது.
தமிழக அரசின், 1987 அரசாணைப்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், நிறுவனங்களில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்த வேண்டும். இதை முறையாக பின்பற்றுவதில்லை.
அரசு அலுவலகங்கள், வணிகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளை தமிழுக்கு அடுத்ததாக கீழ் பகுதியில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
2017ல் நீதிபதிகள் அமர்வு, 'அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் நான்கு மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.
இதை நிறைவேற்றவில்லை. தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பு, 'அரசாணைப்படி அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை' என, வாதிட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். சட்டக் கல்லுாரி உட்பட பல கல்லுாரிகளில் தமிழில் புத்தகங்கள் வழங்கலாம்.
தற்போது, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மாடல் என்பதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன; அதில் ஆங்கிலத்திற்கு பதில் தமிழை பயன்படுத்தலாமே.
அரசாணையை பின்பற்றி கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம் பெறுகிறதா; இல்லையெனில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொழிலாளர் நலத்துறை செயலர் பிப்., 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!